முரட்டுத்தனமா அடிக்கிறாங்க..தயவு செஞ்சி அந்த விதியை எடுங்க…முகமது சிராஜ் வேதனை!

Published by
அகில் R

Siraj : பெங்களூரு அணியின் முகமது சிராஜ் ஐபிஎல் தொடரில் பின்பற்ற படும் ‘இம்பாக்ட்’ விதியை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் உபயோகப்படுத்தும் விதியான இம்பாக்ட் ப்ளேயர் விதி பல சர்ச்சைகள் ஏற்படுத்தி வருகிறது. மேலும், இந்த விதியை நீக்க வேண்டும் என்று பல முன்னாள் கிரிக்கெட் பிரபலங்களும், விளையாடி கொண்டிருக்கும் தற்போதைய கிரிக்கெட் பிரபலங்களும் பல இடங்களில் பேசும் பொழுது இதை குறிப்பிட்டு கூறி இருக்கின்றனர். அதிலும் சில நாட்களுக்கு முன் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் ஷர்மாவும் இதை குறித்து பேசி இருந்தார்.

இந்நிலையில், ஐபிஎல் தொடரில் நேற்றைய மதிய போட்டியில் கொல்கத்தா அணியும், பெங்களூரு அணியும் மோதியது. இதில் கொல்கத்தா அணி 1 ரன்கள் வித்யாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்த போட்டிக்கு பிறகு பெங்களூரு அணி வேக பந்து வீச்சாளரான முகமது சிராஜ் இந்த இம்பாக்ட் பிளேயர் விதியை பற்றி சில விஷயங்களை சிரித்து பேசி இருந்தார்.

அவர் பேசுகையில், “முதலில் உங்களை நீங்கள் எல்லா நிலையிலும் தயார்ப்படுத்தி கொள்ள வேண்டும். நீங்கள் அதிகமாக நெகட்டிவ் பற்றி சிந்தித்தால் நான் அது உங்களுக்கும், உங்களைச் சுற்றியும் ஒரு நெகட்டிவ் பாதிப்பையே ஏற்படுத்தும். மேலும், ஐபிஎல் தொடரில் பயன்படுத்தும் இந்த இம்பாக்ட் விதியை தயவு செய்து நீக்குங்கள் (சிரித்துக் கொண்டே பேசினார்). இங்கு பிட்சுகள் ஏற்கனவே பேட்டிங்கு வசமாக உள்ளது.

இதில் பந்து வீச்சார்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை ஆட்டத்தின் தொடக்கத்தில் பந்து வீச்சாளர்களுக்கு சில நேரங்களில் பிட்ச் உதவுகிறது. ஆனால், அப்போதும் பேட்ஸ்மேன்கள் பந்து ஸ்விங்கிலிருந்து தடுப்பதற்கு வெளியே வந்து விளையாடுகிறார்கள். மேலும், எனது விளையாட்டின் திட்டம் எப்போதுமே சீரானதாகத்தான் இருக்கும். ஐபிஎல்லில் ஒரு அணி 250-க்கும் மேற்பட்ட ரன்கள் அடிப்பது எப்பவாவது தான் நடக்கும்.

ஆனால் இப்போது அது சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. அதற்கு இந்த இம்பாக்ட் விதிக்கும், தட்டையான பிட்ச்களுக்கும் தான் நன்றி சொல்ல வேண்டும்”, என்று போட்டி முடிந்த பிறகு ‘இம்பாக்ட்’ விதியை பற்றி சிராஜ் பேசி இருந்தார். இவர் பேசியது இணையத்தில் தற்போது  வைரலாகி வருகிறது.

Published by
அகில் R

Recent Posts

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

39 minutes ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

2 hours ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

3 hours ago

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

4 hours ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

4 hours ago

பஹல்காம் தாக்குதல்: பொதுமக்களிடம் இதெல்லாம் உள்ளதா.? என்ஐஏ வேண்டுகோள்.!

டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…

4 hours ago