ஒரு நாளுக்காக ஓடுவது முக்கியமில்ல..வாழ்க்கை தான் முக்கியம்.விராட்டின் வலி பதில்..!

Default Image
  • விளையாட்டுத்துறையை அதிர்ச்சி செய்த கூடைப்பந்தின் முடிசூடா கோப் பிரையண்ட் மரணம்
  • ஒருநாளைக்கு என்ன செய்கிறீர்கள் என்பது முக்கியமில்லை. வாழ்க்கை தான் முக்கியம் என்று உருக்கத்தோடு தெரிவித்துள்ளார்.

என்பிஏ கூடைப்பந்து ஜாம்பவான் கோப்பிரையண்ட் மற்றும் அவருடைய மகள் உள்ளிட்ட 9 பேர் கடந்த மாத இறுதியில் ஏஞ்சலீஸ் நகருக்கு வெளியே கலாபாஸாஸ் என்ற மலைமீது ஹெலிகாப்டா் மோதியதில் உடல்கருகி உயிரிழந்தனர்.கோப் பிரையண்ட்டி மறைவு விளையாட்டு துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.அவருடைய மறைவுக்கு  இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் துணை கேப்டன் ரோஹித் சா்மா ஆகியோா் இரங்கல் தெரிவித்தார்கள்.

இந்நிலையில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த விராட் கோப் பிரையண்ட் மரணம் குறித்து பேசினார்.

அதில்கோப் பிரையண்டின் மரணம்  ஆனது அதிர்ச்சி அளித்தது. காலை நேரத்தில் நான் என்பிஏ கூடைப்பந்து ஆட்டங்களை ரசித்து பார்த்து வளர்ந்தவன். இந்நிலையில் கோப் போன்று ஒருவர் இறக்கும்போது இவற்றை எல்லாத்தையும் ஒரு கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டியுள்ளது. ஒருவரின் திறமையைப் பார்த்து நீங்கள் அதற்கு ஊக்கம் கொள்கிறீர்கள். ஆனால் கடைசியில் நம்முடைய இந்த வாழ்க்கையானது ஒரு  நிலையற்றது.சிலசமயத்தில் வாழ்க்கையை மறந்துவிட்டு வேலையில் அதாவது விளையாட்டில் கூடுதல் ஈடுபாடு காட்டுகிறோம்.

எந்த ஷாட்டை எப்படி அடித்து விளையாட வேண்டும், எப்படிப் பந்துவீச வேண்டும் என்று ஆனால் உண்மையான வாழ்க்கையை வாழ நாம் மறந்துவிடுகிறோம். கோப் பிரையண்டின் மரணம் இவை எல்லாவற்றையும் ஒரே கண்ணோட்டத்தில் என்னை பார்க்கவைத்துவிட்டது. நீங்கள் வாழும் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவித்து வாழவேண்டும், ஒருநாளைக்கு என்ன செய்கிறீர்கள் என்பது இங்கு முக்கியமில்லை. வாழ்க்கை தான் நமக்கு முக்கியம் என்று  உருக்கமோடு கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Kallazhagar 2025
Ganga Expressway IAF
pm modi - kerala port
Retro
ADMK Chief secretary Edappadi Palanisamy
Minister Anbil Mahesh