இந்திய அணி நியூஸிலாந்துக்கு பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக சென்றுள்ளது. இதில் முதல் டி20 ஆக்லாந்து மைதானத்தில் போட்டி நடைபெற்றது. பின்னர் எதிர்கொண்ட இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றியுடன் துவக்கியுள்ளது. அதில் இந்திய அணி 204 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடி 19 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அபாரமாக வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது போட்டி 26-ம் தேதி (நாளை)அதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதனிடையே, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதை அண்மைக்காலமாக தவிர்த்துவரும் முன்னாள் கேப்டன் தோனி, விரைவில் ஓய்வுபெற வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டாரத்தில் அவ்வப்போது கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ரவி சாஸ்திரி, நடப்பாண்டு ஐபிஎல் தொடர், தோனியின் கிரிக்கெட் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என குறிப்பிட்டார். ஒருவேளை, வருகிற ஐபிஎல் தொடர் தோனிக்கு சிறப்பாக அமையாத பட்சத்தில், அவர் தனது ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளதாக ரவி சாஸ்திரி தோனியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சிகரமான தகவல் தெரிவித்தார்.
லடாக் : லடாக்கில் 15,000 அடி உயரத்தில் இந்திய ராணுவம் உள்நாட்டு ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக…
திருச்சி : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று (ஆகஸ்டு 17) திருச்சியில் "மரங்களின் மாநாடு" நடத்தப்படும்…
கடலூர் : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சிதம்பரத்தில் தனது "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன்…
டமாஸ்கஸ் : இஸ்ரேல் தனது அண்டை நாடான சிரியாவில் ஒரு பெரிய வான்வழித் தாக்குதலை நடத்திருக்கிறது. காசாவில் ஹமாஸ் மற்றும்…
சென்னை : முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என திமுக…
இங்கிலாந்தில் 200 ஆண்டுகள் பழமையான மற்றும் அந்நாட்டின் அடையாளமாக விளங்கிய சைக்காமோர் கேப் மரத்தை வெட்டியதற்காக இரண்டு நபர்களுக்கு 4…