Christiano Ronaldo [file image]
ரொனால்டோ : போர்த்துக்கீசிய நட்சத்திர வீரரான ரொனால்டோ தற்போது சவுதி புரோ லீக் தொடரில் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
கால்பந்து ஜாம்பவானான கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது கிளப் போட்டிகளில் ஒன்றான சவுதி புரோ லீக் தொடரில் உள்ள அல்-நாசர் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த புரோ லீக் கால்பந்து தொடரின் 48-வது சீசன் நடைபெற்று நேற்று முடிவடைந்துள்ளது. இந்த புரோ லீக் கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடித்த முதல் வீரராக ரொனால்டோ புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இந்த தொடரில் மொத்தம் 18 அணிகள், தலா 2 முறை மோதிக்கொள்ளவர்கள். இந்த தொடரில் நேற்று ரியாத்தில் நடைபெற்ற 39-வது சுற்றின் கடைசி லீக் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார். இந்த கடைசி லீக் போட்டியில் ரொனால்டோவின் அல்-நாசர் அணி, அல்-இத்திஹாடு அணியை சந்தித்தது.
விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் 4-2 என்ற கணக்கில் அல்-நாசர் அணி வெற்றி பெற்றது. இதில் 2 கோல்களை ரொனால்டோ அடித்து அசத்தினார். இதன் மூலம் சவுதி புரோ லீக் தொடரில் 35 கோல்கள் அடித்த முதல் வீரராக ரொனால்டோ உள்ளார். இதற்கு முன்னர் 2018-19 நடைபெற்ற தொடரில் அல்-இத்திஹாடு அணி வீரரான அப்தர்ரஜாக் ஹம்தல்லா 34 கோல்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.
இந்த சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது முறியடித்துள்ளார். இது தவிர்த்து ரொனால்டோவின் அணியான அல்-நாசர் அணி முதன் முறையாக இந்த சவுதி புரோ லீக் தொடரில் 100 கோல்கள் அடித்துள்ளது. மேலும், அல் ஹிலால் அணி 96 புள்ளியுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றனர். அதே நேரத்தில் அல் நாசர் அணி 82 புள்ளியுடன் 2-வது இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…