புதிய சாதனையை படைத்த கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ !!

Published by
அகில் R

ரொனால்டோ : போர்த்துக்கீசிய நட்சத்திர வீரரான ரொனால்டோ தற்போது சவுதி புரோ லீக் தொடரில் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

கால்பந்து ஜாம்பவானான கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது கிளப் போட்டிகளில் ஒன்றான சவுதி புரோ லீக் தொடரில் உள்ள அல்-நாசர் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த புரோ லீக் கால்பந்து தொடரின் 48-வது சீசன் நடைபெற்று நேற்று முடிவடைந்துள்ளது. இந்த புரோ லீக் கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடித்த முதல் வீரராக ரொனால்டோ புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இந்த தொடரில் மொத்தம் 18 அணிகள், தலா 2 முறை மோதிக்கொள்ளவர்கள். இந்த தொடரில் நேற்று ரியாத்தில் நடைபெற்ற 39-வது சுற்றின் கடைசி லீக் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார். இந்த கடைசி லீக் போட்டியில் ரொனால்டோவின் அல்-நாசர் அணி, அல்-இத்திஹாடு அணியை சந்தித்தது.

விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் 4-2 என்ற கணக்கில் அல்-நாசர் அணி வெற்றி பெற்றது. இதில் 2 கோல்களை ரொனால்டோ அடித்து அசத்தினார். இதன் மூலம் சவுதி புரோ லீக் தொடரில் 35 கோல்கள் அடித்த முதல் வீரராக ரொனால்டோ உள்ளார். இதற்கு முன்னர் 2018-19 நடைபெற்ற தொடரில் அல்-இத்திஹாடு அணி வீரரான அப்தர்ரஜாக் ஹம்தல்லா 34 கோல்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.

இந்த சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது முறியடித்துள்ளார். இது தவிர்த்து ரொனால்டோவின் அணியான அல்-நாசர் அணி முதன் முறையாக இந்த சவுதி புரோ லீக் தொடரில் 100 கோல்கள் அடித்துள்ளது. மேலும், அல் ஹிலால் அணி 96 புள்ளியுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றனர். அதே நேரத்தில் அல் நாசர் அணி 82 புள்ளியுடன் 2-வது இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
அகில் R

Recent Posts

நடிகர் கவுண்டமணியின் மனைவி உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி.!

சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…

58 minutes ago

SRH vs DC : வெற்றி யாருக்கு? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…

2 hours ago

குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் வெளியானது.!

சென்னை :  குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…

2 hours ago

“முதல்வர் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்” – தமிழிசை சௌந்தரராஜன்.!

சென்னை : தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ள பாகிஸ்தான் பங்களாதேஷை சேர்ந்தவர்களை வெளியேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் பயங்கரவாத தாக்குதலை…

2 hours ago

விஜய்யை நெருங்கிய தொண்டர் தலையில் துப்பாக்கி வைத்த பாதுகாவலர்.!

மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…

3 hours ago

பஹல்காம் தாக்குதல் : 2வது முறையாக பாகிஸ்தான் ஏவுகணை சோதனை.!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…

3 hours ago