இந்தியாவின் கிரிக்கெட் பிளேயர்களைப் பொருத்தவரை தோனியா அல்லது சௌரவ் கங்குலியா என்று அடிக்கடி இவர்கள் இருவர் பெயரை வைத்து ரசிகர்கள் சண்டை போடுவது வழக்கம். இந்நிலையில், இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் அவர்கள் பேசியுள்ளார்.
அவர் பேசும்பொழுது, ரசிகர்கள் கங்குலி தான் பெரியவர் தோனி தான் பெரியவர் என்று மாறி மாறி விவாதிப்பதை நிறுத்த வேண்டும். ஏனென்றால் நான் கங்குலி தலைமையிலான இந்திய அணியில் நுழைந்து இருந்தாலும், தோனி தலைமையிலான உலக கோப்பை வென்ற அணியில் இடம் பிடித்தவர் என கூறியுள்ளார்.
மேலும் சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாட தொடங்குகையில் கேப்டனாக கங்குலி இருந்ததால், அறிமுகமாகிய வீரர்களுக்கு அவர் கொடுத்த ஊக்கமும் உந்துதலும் சிறப்பாக இருந்தது. இதனால் பலர் உயர்வான நிலைக்கு வந்தனர். அதேபோல தோனி நீண்ட காலமாக அணியை வழிநடத்தி வந்ததால், அவர் மூத்த வீரர்களுடன் தான் பல காலம் பணியாற்றினார்.
ஆனால் நாட்கள் செல்ல பழைய வீரர்கள் ஓய்வு பெறத் தொடங்கியதும் புதிய வீரர்கள் அணிக்குள் நுழைய தொடங்கினார்கள். அப்போது கங்குலி என்ன செய்தாரோ அதையே தான் டோனியும் செய்தார். இருவருமே இந்திய அணியை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்றவர்கள். எனவே இருவருமே ஒரே மாதிரி முக்கியமானவர்கள் தான் என இவர்கள் குறித்து முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…