இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. நேற்று 2-வது டி20 போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 182 ரன்கள் எடுத்தனர்.
183 இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19 ஓவரில் 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனால் இலங்கை அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதற்கு முன் நடந்த முதல் போட்டியில் இலங்கை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இலங்கை அணி தொடரை கைப்பற்றியது.
இப்போட்டியில் பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் இறங்கிய முதல் பந்திலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதன்மூலம் சர்வேதேச டி20 கிரிக்கெட்டில் டக் அவுட்டான வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அஃப்ரிடியை பின்னுக்குத்தள்ளி இரண்டாமித்தை பிடித்துள்ளார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அஃப்ரிடி 8 முறை டக் அவுட் ஆகியுள்ளார். உமர் அக்மல் 9 முறை அவுட் ஆகியுள்ளார். இந்த பட்டியலில் இலங்கையின் முன்னாள் வீரர் திலகரத்னே தில்ஷான் 10 முறை டக் அவுட்டாகி முதலிடத்தில் உள்ளார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…