ஆந்திராவில் தனியார் நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளில் ஊழியர்களின் பணி நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்தி சட்ட திருத்தம் கொண்டுவந்தது மாநில அரசு. தொழிலாளர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் ‘சாதகமாக’ தொழிலாளர் சட்டங்களைத் திருத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் மற்றும் மக்கள் தொடர்பு (ஐ&பிஆர்) அமைச்சர் கே பார்த்தசாரதி தெரிவித்தார். உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், புதிய முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் இம்முடிவு எனக் கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு தொழிற்சங்கங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக, வேலை-வாழ்க்கை சமநிலையை மேம்படுத்துவதற்கும் வேலைவாய்ப்பு […]