டெல்லி : இந்திய ரயில்வே துறை, ஜூலை 1, 2025 முதல் தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் அங்கீகாரத்தைக் கட்டாயமாக்குவதாக அறிவித்துள்ளது. அதாவது, நீங்கள் IRCTC இணையதளத்திலோ அல்லது ரயில் நிலைய முன்பதிவு கவுண்டரிலோ டிக்கெட் எடுக்க, உங்கள் ஆதார் எண்ணைக் கொடுத்து, அதை உறுதிப்படுத்த வேண்டும். இது, தட்கல் டிக்கெட்டுகளை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், உண்மையான பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்யவும் எடுக்கப்பட்ட ஒரு முடிவு எனவும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. […]