மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக நடைபெற்றது. மதுரை வைகை ஆற்றில் தங்கக் குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் எழுந்தருளினார். லட்சக்கணக்கான பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அழகரை குளிர்வித்து, விண்ணை முட்டும் ‘கோவிந்தா கோவிந்தா’ முழக்கத்துடன் வழிபாடு செய்தனர். இந்த கூட்டத்தில் கள்ளழகர் எழுந்தருளும் மண்டகப்படி பகுதியில் பக்தர் ஒருவர் மயங்கி விழந்து உயிரிழந்தார். நெல்லையை சேர்ந்த அவர் (பூமிநாதன்) […]