ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில அரசுகள் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளன. அதன்படி, பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராஜஸ்தானில் எல்லையோரம் உள்ள 5 மாவட்டங்களில் பள்ளிகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஜம்முவில் நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஃபெரோஸ்பூர், பதான்கோட், ஃபாசில்கா, […]
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான சத்வாரி கண்டோன்மென்ட்டில் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. சர்வதேச எல்லைக்கு அருகில் பல இடங்களில் குறிவைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைதொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் விமான நிலையத்தைச் சுற்றி அவசரகால சைரன்கள் ஒலிக்க தொடங்கியது. தாக்குதல்களுக்குப் பிறகு அந்தப் பகுதியில் முழுமையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது, மொபைல் சேவைகளும் செயல்படவில்லை. ஆனால், இந்தியாவை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களை, இந்தியாவின் […]
பிரதமர் மோடி 2நாள் பயணமாக இன்று ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார். அங்கு 32 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆன பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். அதில் இந்தியாவின் மிக பெரிய ரயில்வே சுரங்கப்பாதையையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். காஷ்மீர் பள்ளத்தாக்கில் உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா இடையிலான மின்மயமாக்கப்பட்ட ரயில் இணைப்பை (USBRL) பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். மேலும், நாட்டின் மிக நீளமான போக்குவரத்து சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சுவிட்சர்லாந்து செல்வதை […]
ஜம்மு காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுன்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என காஷ்மீர் பாதுகாப்பு படையினர் இன்று தெரிவித்துள்ளனர். பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக காஷ்மீர் போலீசார், இந்திய ராணுவம் ஈடுபட்ட கூட்டு நடவடிக்கையில் 34 ராஷ்டிரிய ரைஃபிள் பிரிவு வீரர்கள், 9 உயர் சிறப்புப் படை பிரிவினர், காஷ்மீர் போலீஸ் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் ஈடுபட்டனர். அப்போது குல்காம் மாவட்டத்தின் டிஹெச் போரா பகுதியின் சாம்னோ பாக்கெட்டில் நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் இந்த என்கவுன்டர் […]
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள முன்ஜ் மார்க் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட மூவரும் “தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான எல்.ஈ.டி.யுடன் தொடர்புடையவர்கள் என்றும் அவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்துமத்திய அரசு ரத்து செய்யப்பட்டு மேலும், அப்பகுதியை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இந்த அதிரடி நடவடிக்கையின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டனர். மேலும், முன்னாள் முதலமைச்சர்கள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் உள்பட பலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது காஷ்மீரில் நிலைமை சீரடைந்ததையடுத்துவருகிறது. எனவே வீட்டுக்காவலில் இருந்த பலரும் […]
ஜம்மு-காஷ்மீரில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் மீண்டும் திறக்க அனுமதி. ஆகஸ்ட்- 16, முதல் ஜம்மு-காஷ்மீரில் அனைத்து மத இடங்களும் வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்படவுள்ளது. மத ஊர்வலங்கள் மற்றும் பெரிய மதக் கூட்டங்கள் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளன, முதன்மை செயலாளர் ரோஹித் கன்சால் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார். யூனியன் பிரதேசத்தில் வழிபாட்டுத் தலங்கள் மீண்டும் திறக்க தனி எஸ்ஓபி விரைவில் வெளியீடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . அனைத்து அத்தியாவசியமற்ற செயல்களுக்கும் தனிநபர்களின் நடமாட்டம் இரவு 10 மணி முதல் […]