திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் (27) பட்டப் பகலில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியான சுர்ஜித் (21) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அவருடைய பெற்றோர்களையும் கைது செய்யவேண்டும் என உயிரிழந்த கவினின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், […]
சென்னை : நெல்லை ஆணவக் கொலை “நீளும் சாதிய அருவருப்பின் அட்டூழியம்” என்று இயக்குநர் மாரி செல்வராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். இயக்குநர் மாரி செல்வராஜ், சாதிய அருவருப்பு மற்றும் அதன் கொடுமைகளுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். அந்த வகையில், தற்போது அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், ”சாதிய பெருமைவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை அரசு இன்னும் துரிதமானதாகவும் கடுமையானதாகவும் நிச்சயம் செயல்படுத்தியே ஆக வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவில், திருநெல்வேலியில் நடந்த ஆணவக் […]