சென்னை : கனமழை காரணமாக கேரளா வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 150ஐ கடந்துள்ளது. 1000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மத்திய , மாநில மீட்பு படையினர், ராணுவத்தினர் இந்த மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக, வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க, அவர்களுக்கு உதவிகள் புரிய தமிழக அரசு சார்பில், 2 ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில், மீட்பு குழுவினர், தீயணைப்பு படையினர், மருத்துவ குழுவினர் இன்று அதிகாலை 4 மணி […]
வயநாடு நிலச்சரிவு : கேரளா மாநிலம் வயநாட்டில், முண்டைக்கை பகுதியில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. அடுத்ததாக சூரல்மலை பகுதியில் இன்று அதிகாலை 2 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனை அடுத்து 4 மணி அளவிலும் நிலச்சரிவு ஏற்பட்டது. சூரல்மலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் அந்த பகுதிக்கு செல்ல கூடிய பாலங்கள், சாலைகள் முற்றிலும் சேதமடைந்தது. இந்த சூரல்மலை பகுதியில் தான் சுமார் 500 குடும்பங்கள் நிலச்சரிவில் சிக்கியுள்ளனர் என்றும், அங்கு […]
கேரளா: விழிஞ்சம் துறைமுகத்தில் 2,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், 2028-29இல் 5,500 வேலைவாய்ப்புகளாக இது உயரும் என்றும் கரண் அதானி தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அரபிக் கடலோரத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ளது விழஞ்சம் துறைமுகம். விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் மொத்தம் 8,867 கோடி ரூபாய் முதலீட்டில் கட்டப்பட்டுள்ளது . கேரள மாநில அரசு சார்பில் 5,595 கோடி ரூபாயும், மத்திய அரசு சார்பில் 818 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. பொது-தனியார் கூட்டாண்மையில் இந்த விழிஞ்சம் துறைமுகம் […]
கேரளா: இந்த கல்வியாண்டிற்கான மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்ததாக ராஜஸ்தான், குஜராத் , பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் புகார்கள் பதியப்பட்டுள்ளன. இதுகுறித்து பல்வேறு வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீட் நுழைவு தேர்வை ரத்து செய்ய கோரி தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வரும் சூழலில், நேற்று முன்தினம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி நீட் முறைகேடு குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். நீட் […]
கேரளா: மத்திய அரசு பதிவேடு உள்ளிட்ட அனைத்து அரசு பதிவேடுகளிலும் கேரள மாநிலத்தின் பெயர் கேரளா (Kerala) என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை மாற்றி மலையாள சொல் வரும்படியாக கேரளம் (Keralam) என மாற்ற அம்மாநில அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. முன்னதாக கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி இதே கேரளா மாநில சட்டமன்றத்தில் மாநில முதல்வர் பினராயி விஜயன் இந்த தீர்மானத்தை கொண்டுவந்து நிறைவேற்றினார். பின்னர் அதனை மத்திய அரசுக்கு பரிந்துரைத்து அனுப்பி […]
Pinarayi Vijayan: கேரளாவின் கண்ணூர் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்டமாக 21 மாநிலங்களில் கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனை தொடர்ந்து, 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 88 தொகுதிகளில் 2ம் கட்ட மக்களவைத் தேர்தல் இன்று காலை 7 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், கேரளாவில் […]
Pinarayi Vijayan: மத்திய விசாரணை அமைப்புகளுக்கு ஆதரவாக ராகுல் காந்தி கருத்து தெரிவித்துப்பது அவரது பக்குவமற்ற அரசியலை எடுத்துரைக்கிறது என பினராயி விஜயன் கூறியுள்ளார். பாஜகவிற்கு எதிராக இந்தியா கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மக்களவை தேர்தலை எதிர்கொண்டு வருகிறது. இந்த வேளையில், கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸுக்கு எதிராக பேசுவதும், கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக காங்கிரஸ் பேசுவதும் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல் கட்டமாக 21 மாநிலங்களில் கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு […]
Kerala: ராகுல் காந்திக்கு டிஎன்ஏ சோதனை செய்ய வேண்டும் என்று கேரளா எம்எல்ஏ கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக 21 மாநிலங்களில் கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் கேரளா, ராஜஸ்தான், கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான அனல் பறக்கும் […]
Kerala Election 2024 : கேரளாவில் கடந்த முறை போல இந்த முறையும் மக்களவை தேர்தலில் தடம்பதிக்க காங்கிரஸ் தீவிரமாக வேலை செய்து வருகிறது. நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வேளைகளில் அரசியல் கட்சியினர் வெகு விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வார வெள்ளிக்கிழமை ஏப்ரல் 19ஆம் தேதியன்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று முடிந்தது. அடுத்து வரும் வெள்ளிக்கிழமை […]
Pinarayi Vijayan : குடியுரிமை திருத்தச் சட்டத்தை கேரளாவில் அமல்படுத்தப்படாது என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (CAA) நாடு முழுவதும் பல்வேறு எதிர்ப்புகள் மற்றும் போராட்டங்களை தொடர்ந்து, அந்த சட்டம் அமல்படுத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. Read More – குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) என்றால் என்ன? இச்சட்டத்திற்கு எதிர்ப்பு இருப்பது ஏன்? விரிவான தகவல் இதன்பின், விரைவில் சிஏஏ சட்டம் அமல்படுத்தப்படும் […]
Kerala Govt OTT : இந்தியாவின் முதல் அரசுக்கு சொந்தமான OTT தளமான CSpace கேரளாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேரளாவின் திருவனந்தபுரத்தில் நேற்றைய தினம் இந்தியாவின் முதல் அரசுக்கு சொந்தமான OTT தளத்தை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். அமேசான், நெட்பிளிக்ஸ் போன்று செயல்பட உள்ள இந்த ஓடிடி தளத்திற்கு ‘சி ஸ்பேஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. READ MORE – இந்த வாரம் வயிறு குலுங்க சிரிக்கலாம்! ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்! OTT […]
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், தென் இந்திய மாநிலங்களுக்கு உரிய வரி பகிர்வு, சலுகைகள் அறிவிக்கப்படவில்லை என கூறி தமிழகம், கேரளா, கர்நாடகா மாநில அரசுகள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். அனைவருக்கும் வழிகாட்டியாக மன்மோகன் சிங் திகழ்கிறார்.! பிரதமர் மோடி புகழாரம்.! நேற்று கர்நாடக அரசு சார்பில அம்மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், கர்நாடக காங்கிரஸ் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் […]
மாநில அரசின் நிதி நிர்வாகத்தில் மத்திய அரசு தலையிடுவதை கேரளா அரசு எதிர்த்தது. இதை தொடர்ந்து இந்த எதிர்ப்புக்கு தமிழ்நாடு அரசு முழு ஆதரவு அளிக்கும் என கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். கன்னியாகுமரியில் திமுக தேர்தல் அறிக்கை குழு பொதுமக்களிடம் கருத்து கேட்பு..! தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதிய மூன்று பக்க கடிதத்தில் மத்திய அரசு சில அரசியலமைப்புச் சட்டத்தின் 293-வது பிரிவின் கீழ் அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்தி, […]
கேரள சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் உரையாற்றும் போது கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் தனது உரையை சுருக்கி கொண்டு கடைசி பத்தியை மட்டும் வாசித்தார். ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும், கேரளா அரசுக்கும் இடையே மோதல் போக்குதொடர்ந்து வருகிறது. கேரளா பல்கலைக்கழகம் செயல்படுவது குறித்தும், சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சில மசோதாக்களில் அவர் கையெழுத்திடாமல் இருப்பது குறித்தும் ஆளுநருக்கும், அரசுக்கு இடையே மோதல்போக்கு ஏற்பட்டு வருகிறது. கேரளா சட்டமன்ற கூட்டுத்தொடர் இன்று முதல் வருகின்ற 27-ம் […]
கேரள மாநிலம் கொச்சியில் லிவிங்ட்டன்னில், சுமார் 4000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் சர்வதேச கப்பல் பழுது பார்க்கும் மையத்தையும், புதிய உலர் கப்பல் துறையையும் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார் அதற்காக நேற்று இரவு கேரளா வந்தடைந்தார். பொன்முடி தாக்கல் செய்த மேல்முறையீடு.! உச்சநீதிமன்றத்தில் எப்போது விசாரணை.? டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கொச்சி விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை, கேரள […]
கேரளாவில் நவ கேரள சதாஸ் என்ற யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. அதாவது கேரள மாநிலத்தில் அரசின் சாதனைகளை மக்களுக்கு நேரில் சென்று எடுத்துரைக்கும் வண்ணம் இந்த யாத்திரை நடைபெற்று வருகிறது. இதற்காக பேருந்துகளில் கேரள முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பயணித்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த மாதம் இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர் இந்த யாத்திரைக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், நேற்று பெரும்பாவூரில் இருந்து கொத்தமங்கலம் நோக்கிச் சென்று கொண்டிருந்த முதல்வர் பினராயி […]
இன்று டெல்லி சந்திப்பின் போது, கேரளாவில் புகழ்பெற்ற கதகளி உருவ பொம்மையை பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வழங்கினார். கேரளாவில் ஆளும் முதல்வர் பினராயி விஜயன் அரசுக்கும், கேரள ஆளுநருக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது. இதற்கு தீர்வு காண பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, ஆளுநர் விவகாரம் குறித்தும், கேரளாவில் சட்டமன்ற மசோதாக்கள் ஆளுநர் கையெழுத்திடாமல் இருப்பது குறித்தும் பிரதமரிடம் கூறுவதற்கு சென்றிருந்தார். இன்று டெல்லியில் பிரதமரை சந்திக்க கேரள முதல்வர் […]
முல்லை பெரியாறு அணை உறுதியுடன் இருக்கிறது. அணை பக்கம் இருக்கும் கேரள எல்லையில் வசிக்கும் மக்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. – மு.க.ஸ்டாலின் கடிதம். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் அதில் முல்லை பெரியாறு அணை பற்றி எழுதியுள்ளார். அதாவது முல்லை பெரியாறு அணையின் உறுதித்தன்மை ஆராய வேண்டும். அது நிரம்பி வருவதால் கேரள கரையோர மக்களுக்கு பாதிப்பு உண்டாகும் அபாயம் இருக்கும் என கேரள முதல்வர் […]
கேரளா முதல்வர் பினராயி விஜயன் கண்ணூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு திங்கள்கிழமை பயணம் செய்த விமானத்தில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் இருவர் முதலமைச்சர் பதவியிலிருந்து பினராயி விஜயனை ராஜினாமா செய்யக் கோரி முழக்கங்களை எழுப்பினர். இதனை கேரளா இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.எஸ்.சபரிநாதன் சமூக வலைதளங்களில் 3 வினாடிகள் கொண்ட வீடியோவை பகிர்ந்துள்ளார், அதில் இருவர் விஜயனை ராஜினாமா செய்யக் கோரி முதலமைச்சருக்கு எதிராக முழக்கங்களை எழுப்புவதையும், முதலமைச்சருடன் வந்த ஒரு நபர் […]
கேரளா:சிபிஐ (எம்) மத்திய குழு உறுப்பினர் எம்.சி.ஜோஸ்பின் காலமானதற்கு கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் இரங்கல். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் எம்.சி. ஜோஸ்பின் (வயது 74) கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.சிபிஐ(எம்) கட்சியின் 23-வது கட்சி மாநாட்டில் கலந்து கொண்ட ஜோஸ்பின் சனிக்கிழமை இரவு மாரடைப்பு ஏற்பட்டு,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார் என்று கூறப்படுகிறது. முதல்வர் இரங்கல்: இதனையடுத்து,அவரது மறைவுக்கு சிபிஐ(எம்) கட்சியினர் […]