சென்னை : கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) அமைந்துள்ள VGP பொழுதுபோக்கு பூங்காவில், நேற்று ராட்டினம் திடீரென பழுதானதால் 36 பேர் 50 அடி உயரத்தில் மூன்று மணி நேரமாக அந்தரத்தில் சிக்கித் தவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு இந்த தகவல் தெரியப்படுத்தப்பட்டது. தகவலை அறிந்த தீயணைப்பு வீரர்களும் உடனடியாக பூங்காவிற்கு சென்று சிக்கியிருந்த அனைவரையும் பத்திரமாக மீட்டனர். இந்தச் சம்பவம் பூங்காவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. […]