டெல்லி : மத்திய விவசாயிகள் பாசனத்திற்காக பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் நீர் வீணாவதையும், தவறாகப் பயன்படுத்தப்படுவதையும் தடுக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்படுகிறது. மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டில் இது குறித்து கூறுகையில், “தண்ணீர் வீணாவதைத் தடுக்க புதிய திட்டத்தை கொண்டு வருகிறோம். இதன்மூலம் விவசாயிகள் தங்களுக்குத் தேவையான நீரைப் பெறுவார்கள். பயன்பாட்டுக்கு ஏற்றவாறு அவர்களுக்கு வரி விதிக்கப்படும்” என்றார். இந்தத் திட்டம் சோதனை முயற்சியாக பல்வேறு மாநில […]
கடந்த 5 ஆண்டுகளில் 7.20 லட்சம் பேர் தற்கொலை செய்துள்ளனர் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல். டெல்லி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் 7.20 லட்சம் பேர் தற்கொலை செய்துள்ளனர். இதில், 2.50 லட்சம் பேர் 18-29 வயதுடையவர்கள் என்ற அதிர்ச்சி தகவலை ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதில், 77,656 பேர் தமிழ்நாட்டில் தற்கொலை செய்துள்ளனர்.