டிசம்பர் மாதத்திற்குள் 100 வேலைவாய்ப்பு முகாம்கள் – உதயநிதி ஸ்டாலின்

அமைச்சர்களாகிய எங்களுக்கு முதல்வர் எச்சரிக்கை விடுத்தார் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்.
சென்னை மாநில கல்லூரியில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டிசம்பர் மாதத்துக்குள் 100 வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 5 ஆண்டிற்குள் வேலையில்லா பட்டதாரி ஒருவர் கூட இல்லை என்ற நிலை உருவாகும் என தெரிவித்தார். மேலும், அமைச்சர்கள் ஒழுங்காக இருக்க வேண்டும், இல்லை என்றால் துறையை மாற்றிவிடுவேன் என அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் கூறியதாகவும் கூறினார்.