இலங்கையில் கடந்த சில வாரங்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதன் காரணமாக இலங்கையில் உள்ள மக்கள் அகதிகளாக இந்தியாவிற்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் இன்றும் படகு மூலமாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 14 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த 14 பேரில் 12 பேர் 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் எனவும், மற்ற இரண்டு பேர் படகோட்டிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 12 பேரும் இலங்கையிலுள்ள திருகோணமலையை சேர்ந்தவர்கள் எனவும், படகோட்டிகள் இருவரும் மன்னாரை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
இவர்கள் 14 பேரும் இன்று அதிகாலை மன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு வந்த பொழுது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், இவர்கள் அனைவரும் மன்னார் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இவர்கள் அனைவரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக மன்னார் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 - ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
தெஹ்ரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. 11-வது நாளாக நீடித்து வரும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஸ்ரீகாந்த் மீது போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…