24 படத்தின் இரண்டாம் பாகம்.? வெளியான புதிய தகவல்.!

Published by
பால முருகன்

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா இயக்குனர் பாலா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். படத்திற்கான படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கப்படவுள்ளது.

இந்த படத்திற்காக நடிகர் சூர்யா 30 நாள் கால்ஷீட் கொடுத்துள்ளார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கும் படமும் கைவசம் வைத்துள்ளார்.

இந்த படங்களையெல்லாம் தொடர்ந்து அடுத்ததாக சூர்யா 24 திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2016-ஆம் ஆண்டு இயக்குனர் விக்ரம் குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 24. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை சமந்தா நடித்திருப்பார்.

இதில், வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த சூர்யா கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்றே கூறலாம். இந்த நிலையில், தற்போது படத்திற்கான இரண்டாம் பாகம் தயாராகவுள்ளதாக கூறப்படுகிறது. சூர்யா வாடிவாசல் படத்தில் நடித்து முடித்தவுடன் 24-2 படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

காசா : உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்‌ரேல் படை தாக்குதல்! 32 பேர் பலி?

கான்யூனிஸ் : காசாவில் உணவுப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், உணவு விநியோக மையத்தில் காத்திருந்தபோது, இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில்…

22 minutes ago

ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்னும் ஏமாளி அல்ல – எடப்பாடி பழனிசாமி பேச்சு!

சென்னை : அடுத்த ஆண்டு (2026) நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவிருக்கிறது. தேர்தலுக்கான வேலைகளில்…

50 minutes ago

அண்ணனுக்கு பிரியாவிடை தந்த முதல்வர் ஸ்டாலின்.., மு.க.முத்து உடல் தகனம் செய்யப்பட்டது.!

சென்னை : உடல்நலக் குறைவால் அவர் இன்று காலமானதை அடுத்து, ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டிருந்தது. மு.க.முத்துவின் உடலுக்கு…

16 hours ago

திருவள்ளூர் 8வயது சிறுமி பாலியல் வழக்கு: நெல்லூரில் வட மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது.!

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான வழக்கில், நெல்லூரில் சந்தேகத்தின் பேரில் வட…

16 hours ago

”தமிழகத்தை 4 பேர் இத்தனை நாளாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றனர்” – இபிஎஸ் குற்றச்சாட்டு.!

சென்னை : நாகப்பட்டினம், வேதாரண்யம், செருதூர் மீனவ கிராம முக துவாரத்தில் எடப்பாடி கே பழனிசாமி மக்களிடம் குறைகளை கேட்டு…

16 hours ago

மு.க.முத்து மறைவு – மநீம தலைவர் கமல்ஹாசன் இரங்கல்!

சென்னை : மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகனும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரருமான மு.க.முத்து மறைவுக்கு…

17 hours ago