24 படத்தின் இரண்டாம் பாகம்.? வெளியான புதிய தகவல்.!

Published by
பால முருகன்

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா இயக்குனர் பாலா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். படத்திற்கான படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கப்படவுள்ளது.

இந்த படத்திற்காக நடிகர் சூர்யா 30 நாள் கால்ஷீட் கொடுத்துள்ளார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கும் படமும் கைவசம் வைத்துள்ளார்.

இந்த படங்களையெல்லாம் தொடர்ந்து அடுத்ததாக சூர்யா 24 திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2016-ஆம் ஆண்டு இயக்குனர் விக்ரம் குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 24. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை சமந்தா நடித்திருப்பார்.

இதில், வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த சூர்யா கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்றே கூறலாம். இந்த நிலையில், தற்போது படத்திற்கான இரண்டாம் பாகம் தயாராகவுள்ளதாக கூறப்படுகிறது. சூர்யா வாடிவாசல் படத்தில் நடித்து முடித்தவுடன் 24-2 படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

7 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

8 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

9 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

9 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

11 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

12 hours ago