500 டாலர்களுக்கும் குறைவான 2 சட்டைகளை திருடிய குற்றத்திற்காக அமெரிக்காவை சேர்ந்த கருப்பின முதியவர் 20 ஆண்டுகளுக்குப் பின்பு தற்பொழுது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த கருப்பினத்தவர் தான் கெய் பிராங்க். இவருக்கு தற்போது வயது 67 ஆகிறது. இவர் கடந்த 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 500 டாலருக்கும் குறைவான மதிப்புள்ள இரண்டு சட்டைகளை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த குற்றத்திற்காக இவருக்கு மிகப் பெரும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவருக்கு நீதிபதிகள் 23 ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை தீர்ப்பு அளித்துள்ளனர். ஆனால் இவர் கருப்பினத்தவர் என்பதால் இவருக்கு கடுமையான தண்டனை வழங்கி உள்ளதாக, சில நிறுவனங்கள் இவருக்காக வாதாடி உள்ளனர்.
எனவே இவரது தண்டனை 3 ஆண்டுகள் மட்டும் குறைக்கப்பட்டு 20 ஆண்டுகள் இவர் சிறையில் இருந்துள்ளார். இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவர் சிறையில் இருக்கும் பொழுது இவரது மனைவி, மகன் மற்றும் இரண்டு சகோதரர்கள் ஆகியோரும் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது விடுதலை செய்யப்பட்டுள்ள முதியவர் கெய் பிராங்க் அவர்களுக்காக பலரும் சமூக வலைத்தளத்தில் ஆதரவு தெரிவித்து வருவதுடன், “கோ பண்ட் மீ” எனும் பக்கத்தில் நிதி திரட்டப்பட்டு வருகிறது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…