கொரோனா தொற்று கண்டறியப்பட்டு மீண்டு வந்த நடிகை கனிகா கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா தானம் செய்ய விரும்புகிறாராம்.
பாலிவுட் திரையுலகின் பிரபலமான பாடகியாக வலம் வந்த நடிகை கனிகா கபூருக்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று இருப்பதாக கூறப்பட்டு, அவரை தனிமையாக இருக்க சொல்லி அறிவுறுத்தப்பட்டார். ஆனால், அவர் சொல் மீறி வெளியில் சென்று பார்ட்டிகளில் கலந்துகொண்டதால் பலருக்கும் கொரோனா பரவ நேர்ந்தது.
இந்நிலையில், பல சோதனைகளுக்கு பிறகு அவர் கொரோனாவிலிருந்து மீண்டு வந்தார். இந்நிலையில், தற்பொழுது இவர் கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் தனது பிளாஸ்மாவை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தர விரும்புவதாக கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய பேராசிரியர் துலிகா சந்திரா, ஏற்கனவே சிலர் இது போன்ற பிளாஸ்மா தானம் செய்ததால் இதுவரை இருவர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும், 50 கிலோவுக்கு அதிகமான உடல் எடையையும், ஹீமோகுளோபின் அளவு 12.5 புள்ளிகளுக்கு அதிகமாகவும் கொண்டவர்கள் தான் இந்த பிளாஸ்மா தானம் செய்ய முடியுமாம்.
எனவே, கனிகா கபூரிடம் இது தொடர்பான சோதனை மேற்கொண்டு அவர் பிளாஸ்மா தானத்துக்கு தகுதியானவர் என்றால் அவரிடமிருந்து பிளாஸ்மா எடுக்கப்பட்டு மற்ற COVID -19 நோயாளிகளுக்கு வழங்கப்படும் என கூறியுள்ளார்.
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ள நிலையில், இன்று கும்பகோணத்தில் நடைபெற்ற பாட்டாளி…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் “மக்களைக் காப்போம், தமிழகத்தை…
சென்னை : படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் மறுப்பதா? என்று அரசுக்கு விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏற்கெனவே…
சென்னை : மதுரையில் சொத்து வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர்…
டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…