தனது மகனின் ஏழு வயது பிறந்தநாளன்று மகனுடன் சேர்ந்து நிர்வாணமாக புகைப்படம் எடுத்த நடிகை ரோஸ்மாண்ட் பிரவுன், கைது செய்யப்பட்டு 3 மாதம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய காலகட்டத்தில் நடிகைகள் மற்றும் பிரபலங்கள் அனைவருமே தங்களது நினைவுகள் ஒன்றும் அழிந்து விடக்கூடாது என்பதற்காக வித்தியாசம் வித்தியாசமாக ஒவ்வொரு நிகழ்வுகளையும் புகைப்படம் எடுத்து வைப்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. சாதாரணமாக குழந்தை பிறப்பது முதல் தங்கள் குழந்தையின் வளரும் காளான் வரை உள்ள புகைப்படங்களை முந்தைய காலகட்டத்தில் எடுப்பார்கள். ஆனால், தற்போது கருவுற்ற ஒரு பெண்மணி தனது ஒவ்வொரு கர்ப்ப மாதத்திலும், புகைப்படங்கள் எடுப்பதும் தனது குழந்தை பிறந்த பின்பு ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வருடமும் வித்தியாசமாக புகைப்படம் எடுப்பதையும் வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.
அதிலும் அனைவரும் இப்பொழுது புகைப்படம் எடுக்க ஆரம்பித்து விட்டதால் வித்தியாசமாக எடுக்க வேண்டுமென நடிகைகள் மற்றும் சில பிரபலங்கள் விரும்புவது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது. அதன்படி வித்தியாசமாக புகைப்படம் எடுக்க வேண்டும் என்பதற்காக கானா நடிகை ரோஸ்மண்ட் பிரவுன் அவர்கள் தனது ஏழு வயது மகனுடன் அவனது பிறந்த நாளன்று நிர்வாணமாக இருந்து மகனுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். இதை தனது சமூக வலைதள பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
எனவே ஆபாசமான விஷயங்களை இடுகையிட்டது மற்றும் வீட்டு வன்முறை எனும் பிரிவிலும் நடிகை ரோஸ்மண்ட் அவர்கள் கைது செய்யப்பட்டு, மூன்று மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் அமெரிக்கர்கள் இது போன்று போட்டோ ஷூட்களை நடத்துவது வழக்கம் எனவும் ஆனால் இந்த புகைப்படத்துக்காக சிறை தண்டனை கொடுப்பது சற்று கடுமையானதாக தான் நினைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…