ஆப்கானிஸ்தான் கார் குண்டுவெடிப்பு – 30 பேர் பலி, 90 பேர் படுகாயம்!

Published by
Rebekal

ஆப்கானிஸ்தானில் உள்ள அரசாங்க விருந்தினர் மாளிகைக்கு அருகே கார் குண்டு வெடித்ததில் 30 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன், 90 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள கிழக்கு லாகூர் மாநிலத்தின் தலைநகராகிய புல்-இ-ஆலம் பிரதேசத்தில் உள்ள அரசினர் விருந்து மாளிகைக்கு அருகே கார் குண்டு வெடிப்பு ஒன்று நேற்று நிகழ்ந்துள்ளது. இந்த குண்டு வெடிப்பின் போது தலை நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் தேர்வுக்காக உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் அந்தக் கட்டடத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பின் போது 30 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன், 90-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பு காரணமாக அருகிலிருந்த மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்களும் அழிக்கக்கப்பட்டுள்ளதாகவும், அருகில் இருந்த மருத்துவமனை ஒன்றில் உள்ள ஒரு வார்டு குண்டு வெடிப்பு காரணமாக முழுவதுமாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தலிபான் தீவிரவாதிகளின் செயலாக இருக்கலாம் என கருதப்பட்டாலும் தற்பொழுது வரை இந்த குண்டு வெடிப்புக்கான காரணம் எதுவும் தெரியவரவில்லை.

Published by
Rebekal

Recent Posts

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…

31 minutes ago

ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்! கடுமையாக எச்சரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…

54 minutes ago

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

16 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

18 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

18 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

19 hours ago