பூக்களின் மீது நடந்து சென்றதால் பிரபல நடிகையின் மீது வழக்கு பதிவு.!

Published by
Ragi

பூக்களின் மீது நடந்து சென்றதால் நடிகை ரோஜா  மீது வழக்கு திடீர் வழக்கு பதிவு.

தமிழ் சினிமாவில் 90ஸில் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமானவர் ரோஜா. இவர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோகளுடன் நடித்துள்ளார்.இயக்குனர் ஆர். கே. செல்வமணியின் மனைவியான இவர் ஆந்திரா மாநிலத்தில் உள்ள நகரி என்ற தொகுதியின் எம். எல். ஏ மற்றும் ஓய்.எஸ்.ஆர் என்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆவர். தற்போது ரோஜா கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தனது தொகுதியில் உள்ள பலருக்கு உணவுகளை வழங்குவதும், அவரே முன்னிறங்கி கிருமிநாசினி தெளிப்பது போன்ற பல உதவிகளை தனது தொகுதி மக்களுக்கு செய்து வருகிறார். இருப்பினும் இவர் தனது தொகுதியில் உள்ள குடிநீர் குழாய் ஒன்றை திறந்து வைக்க செல்கையில்,  அவரை பூக்களை தூவி வரவேற்று பூக்களின் மீது நடந்து சென்றுள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி பலரும் இந்த கொரோனா ஊரடங்கு நெருக்கடி சூழலில் இதுபோ‌ன்ற ஆடம்பரம் எதற்கு என்று கூறி கண்டனம் தெரிவித்து வந்தனர்

இந்த நிலையில் இதனை குறித்து வழக்கு ஒன்றை பதிவு செய்து, பூக்களின் மீது நடந்து சென்ற வீடியோவையும் ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார் வழக்கறிஞரான கிஷோர். தற்போது இதன் வழக்கு இன்று காலை நடைப்பெற்ற போது, இதனை குறித்து விளக்கம் அளிக்க கோரி ரோஜாவிற்கு ஆந்திர மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.. தற்போது இந்த விவாகாரம் ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Published by
Ragi

Recent Posts

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

8 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

9 hours ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

10 hours ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

11 hours ago

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

12 hours ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

12 hours ago