கொரோனா வைரஸ் வுஹான் ஆய்வகத்தில் தான் உருவாக்கப்பட்டது என கூறிய டாக்டர் லி மெங் யானின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்தாண்டு டிசம்பரில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல நாடுகள் தீவிரம் கட்டிவருகிறது.
இதன்காரணமாக வூஹானில் உள்ள ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவிய உண்மைகளை சீனா மறைத்து விட்டதாகவும் அமெரிக்க ஊடகங்கள் கொரோனா பரவல் தொடங்கிய போதே குற்றம் சாட்டி வந்தனர். அதனை சீனா தொடர்ந்து மறுத்துக்கொண்டே வந்தது.
மேலும், கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானது இல்லையெனவும், வூஹான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆதாரங்களும் தன்னிடம் இருப்பதாக சீன வைராலஜிஸ்ட் டாக்டர் லி மெங் யான், கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
மேலும், அவர் அமெரிக்காவில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில், ட்விட்டர் விதிமுறைகளை டாக்டர் லி மெங் யான் மீறியுள்ளதாகவும், இதன்காரணமாக அவரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…