24 மணிநேரத்தில் 1,900 பேரை கொரோனாவிற்கு பலி கொடுத்தது அமெரிக்கா.!

உலகம் முழுக்க கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதவுரை 16 லட்சத்திற்க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுக்க கொரோனாவால் 95 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதில் வல்லரசு நாடாக கருதப்படும் அமெரிக்காவும் கொரோனாவின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது.
அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் 4,68,887 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16,697 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். நேற்று ஒருநாளில் மட்டுமே 1,900 பேரின் உயிரை கொரோனா பறித்துள்ளது.