நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் பட இயக்குனர் சுராஜ்-க்கும் கொரோனா.!

நடிகர் வடிவேலுவை தொடர்ந்து இயக்குனர் சுராஜ்-க்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
நடிகர் வடிவேலு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் ” நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் , இப்படத்தின் படக்குழுவினர் படப்பிடிப்புக்காக லண்டன் சென்று திரும்பிய நிலையில் நடிகர் வடிவேலுக்கு நேற்று கொரோனா உறுதியானது.
இதைத்தொடர்ந்து, நடிகர் வடிவேலு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் பட இயக்குனர் சுராஜ்-க்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக லண்டன் சென்று வந்த ” நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” படக்குழுவினர் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
லேட்டஸ்ட் செய்திகள்
பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!
June 22, 2025
“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!
June 22, 2025