உலகில் கொரோனா தொற்றால் பலரும் பாதிக்கப்பட்டு வருவதால், இதை வெல்ல தடுப்பூசி ஒன்றையே ஆதாரமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் பல நாடுகளில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாகியுள்ளது. ரஷ்யாவில் மனிதர்களுக்காக ஸ்புட்னிக் வி என்ற தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பல நாடுகளில் இத்தடுப்பூசியை செலுத்தியும் வருகின்றனர்.
தற்போது மனிதர்களுக்கு மட்டுமில்லாது நாய், பூனை, சிங்கம், புலி போன்ற விலங்குகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. இதனால் விலங்குகளை பாதுகாக்கும் பொருட்டு ரஷ்யா விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது. அதன்படி, விலங்குகளுக்காக கார்னிவக்-கொவாக் என்ற கொரோனா தடுப்பூசியை ரஷ்யா கண்டுபிடித்துள்ளது. மேலும், இந்த தடுப்பூசி 100 சதவீதம் விலங்குகளுக்கு பயனளிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இந்த கொரோனா தடுப்பூசியை முதன்முறையாக ரஷ்ய ராணுவத்தில் உள்ள செல்லப்பிராணி நாய்க்கு செலுத்தியுள்ளனர். இதனால் ரஷ்யா விலங்குகளுக்கென்று கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்து அதில் வெற்றியையும் அடைந்து சாதனை படைத்துள்ளது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…