கீரிகள் மூலம் கொரோனா பரவுவதால், ஒரு கோடிக்கும் மேற்பட்ட கீரிகளை அழிக்க டென்மார்க் நாட்டு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸை அழிக்க மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில், இதுவரை இந்த வைரஸை அழிப்பதற்கான அதிகாரபூர்வமான மருந்துகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், டென்மார்க் நாட்டில் மிங்க் கீரிகள் மூலம் கொரோனா வைரஸ் பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
டென்மார்க் நாட்டில், பண்ணைகளில் மிங்க் வகை கீரிகள் உணவுக்காக வளர்க்கப்படுகிறது. இந்த கீரிகளின் இறைச்சி, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், இந்த பண்ணையில் வேலை செய்த 214 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், மிங்க் வகை கீரிகள் மூலம் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு வைரஸின் வீரியம் மிக அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, டென்மார்க் நாட்டில் பண்ணைகளில் வளர்க்கப்படும் 1 கோடியே 70 லட்சம் மிங்க் கீரிகளை அழிக்க, அந்நாட்டு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…