உலகம் முழுவதையும் தனது கட்டுக்குள் வைத்துள்ள கொடிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது வரை 15,13,230 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போதுவரை உலகம் முழுக்க 88,403 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். மேலும், இந்த கொடிய கொரோனா வைரஸ் உருவாகி நான்கு மாதங்களில் தற்போது வரை 2 மில்லியன் மக்களை தாக்கும் அளவிற்கு வேகமாக பரவி உள்ளது. நேற்று ஒரே நாளில் உலகம் முழுக்க கொரோனா படுவேகமாக பரவி தீவிரம் அடைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 82500 பேர் உலகம் முழுக்க கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம்:
கொரோனா காரணமாக அமெரிக்காவில் 430,210 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அமெரிக்காவில் 14736 பேர் பலியாகி உள்ளனர்.நேற்று அமெரிக்காவில் புதிதாக 29875 பேருக்கு கொரோனா தாக்கியுள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனா காரணமாக 1895 பேர் பலியாகி உள்ளனர். உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிக நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனா காரணமாக பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இத்தாலியில் கொரோனாவின் தாக்கம்:
இத்தாலியில் 139,422 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 17669 பேர் பலியாகி உள்ளனர். இத்தாலியில் நேற்று மட்டும் 3039 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. நேற்று மட்டும் இத்தாலியில் 542 பேர் பலியானார்கள், ஸ்பெயினில் 747 பேர் பலியானார். உலகிலேயே இத்தாலியில்தான் அதிகமான நபர்கள் கொரோனாவால் பலியாகி உள்ளனர். ஸ்பெயின் இன்னும் சில நாட்களில் பலி எண்ணிக்கையில் இத்தாலியை முந்தும்.
ஜெர்மனியில் கொரோனாவின் தாக்கம்:
ஜெர்மனியில் 113,296 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2349 பேர் பலியாகி உள்ளனர். ஜெர்மனி குறைவான பலி எண்ணிக்கையை கொண்டுள்ளது. பிரான்சில் 112,950 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 10869 பேர் பலியாகி உள்ளனர். ஈரானில் 64,586 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3993 பேர் பலியாகி உள்ளனர். சீனாவில் 81,802 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3333 பேர் பலியாகி உள்ளனர்.
சீனாவில் கொரோனாவின் தாக்கம்:
சீனாவில் இன்றும் கொரோனா காரணமாக யாரும் பலியாகவில்லை. சீனாவில் வேகமாக இயல்பு நிலை திரும்பி உள்ளது. சீனாவில் 77,279 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அங்கு 1190 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இங்கிலாந்தில் கொரோனாவின் தாக்கம்:
யுனைட்டட் கிங்டமில் 60,733 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 7094 பேர் பலியாகி உள்ளனர்.துருக்கியில் 38,226 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 812 பேர் பலியாகி உள்ளனர்.சுவிசில் 23,280 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 895 பேர் பலியாகி உள்ளனர் .
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…