இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்.!!

Published by
பால முருகன்

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் உடல்நலக் குறைவால் கடந்த 11 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். 

தமிழ் சினிமாவில் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயற்கை என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானார். தான் இயக்கிய முதல் படத்திலேயே தேசிய விருதை பெற்றார். இந்த படத்தை தொடர்ந்து ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை போன்ற பல சிறந்த படங்களை இயக்கியுள்ளார். இதனை தொடர்ந்து தற்போது நடிகர் விஜய் சேதுபதியை வைத்து லாபம் என்ற படத்தை இயக்கி வந்தார்.

இந்த படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மார்ச் 11 ஆம் தேதி வியாழன் கிழமை இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் படத்தின் வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு சாப்பிட சென்றுள்ளார். நீண்ட நேரம் கடந்தும் எஸ்.பி.ஜனநாதன் மீண்டும் பணிக்கு வரவில்லை என்பதால் அவரின் உதவியாளர்கள் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது எஸ்.பி.ஜனநாதன் சுயநினைவின்றி இருந்துள்ளார். இதனால் பதற்றமடைந்த உதவியாளர்கள் உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவருக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ள காரணத்தால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று (மார்ச் 14) காலை எஸ்.பி.ஜனநாதனுக்கு திடீரென்று மாரடைப்பும் ஏற்பட்டது. இதனால் சிகிச்சை பலனின்றி காலை 10 மணியளவில் காலமானார். இவருக்கு வயது 61.

Published by
பால முருகன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

12 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

13 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

14 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

14 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

17 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

18 hours ago