விருதுநகரை சேர்ந்தவர் கோபி. இவர் ராமநாதபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு தனது மகன்களான விமல் மற்றும் விஷவாவுடன் சென்றுள்ளனர். அப்போது அவர் காட்டு பிள்ளையார் கோவில்தெரு பகுதியில் உள்ள பள்ளி குளத்தில் குளிக்க தன் இரண்டு மகன்களுடன் சென்றுள்ளனர்.
அப்போது குளித்துக் கொண்டு இருக்கும் போது விமல்(15) குளத்தில் மூழ்கியுள்ளார். இதனை பார்த்த விஷ்வா, காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என சத்தமிட்டுள்ளார். இதனை கேட்டு அருகில் இருந்தவர்கள் காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். ஆனால், விமலை காப்பாற்ற முடியாமல் ஆழத்திற்குள் சென்றதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், 5 மணி நேர போராட்டத்திற்கு பின் விமலின் சடலத்தை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இதனையடுத்து இந்த விபத்து குறித்து ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லி : இந்திய கிரிக்கெட்டின் மிகப் பெரிய நட்சத்திரங்களான ரோஹித் ஷர்மாவும், விராட் கோலியும் 2025 மே மாதத்தில் டெஸ்ட்…
யூடியூப் உலகம் முழுக்க 200 கோடிக்கும் மேற்பட்ட மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு பிரம்மாண்ட மேடையாக இருந்து வருகிறது. இதில் பலர்…
சென்னை : நடிகை தன்யா ரவிச்சந்திரனுக்கும், ‘பென்ஸ்’ திரைப்பட ஒளிப்பதிவாளர் கௌதம் ஜார்ஜுக்கும் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடைபெற்றது. ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. இந்த…
டெல்லி : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, யேமனில் 2017-ம் ஆண்டு தலால் அப்தோ மஹ்தி என்பவரைக் கொலை…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூலை 16 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும்…