“அதிகமாக மாத்திரை சாப்பிட வேண்டாம்”.! முதியவர்களை எச்சரிக்கும் மருத்துவர்கள்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • அதிகமாக மாத்திரை சாப்பிட வேண்டாம் என மூத்த குடிமக்களை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
  • சராசரியாக மூத்த குடிமக்கள் ஒவ்வொருவரும் தினசரி எட்டு மாத்திரைகள் சாப்பிடுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக தனியார் மருத்துவ கல்லூரிகள் சார்பில் 104 முதியவர்கள் மருந்து சீட்டுகளை வைத்து ஆய்வு நடத்தி தகவல் வெளியிட்டுள்ளது. அதில் மருந்துகளை பரிந்துரைப்பது குறித்து பல்வேறு துறை நிபுணர்கள், ஒருவருக்கொருவர் தெரிவித்துக் கொள்வது இல்லை என ஆய்வில் அறியப்பட்டது.

இந்நிலையில், நோயாளிகள் மறுமுறை மருத்துவரை அணுகாமல் நீண்ட நாட்களுக்கு முன்பு கொடுத்த மருந்தையே சாப்பிடுகிறார்கள் எனவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதியவர்கள் ஏற்கனவே சாப்பிடும் மாத்திரைகள் பற்றி தெரிந்து கொள்ளாமல் மேலும் சில மாத்திரைகளை பணியில் இருக்கும் மருத்துவர்கள் கொடுக்கப்படுகின்றனர் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும், இதுபோன்ற காரணங்களால் முதியவர்கள் பலரும் தேவையற்ற மாத்திரைகளை சாப்பிடுகின்றனர் என்பதோடு, இதற்காக அதிக தொகையை செலவிடுகிறார்கள் எனவும், ஆய்வு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் முதியவர்கள் சராசரியாக தினமும் 8 மாத்திரைகளை சாப்பிடுவதாகவும், பலரும் வலி மற்றும் பல் வேறு நோய்களுக்காக தினமும் குறைந்தது 2 முதல் அதிகபட்சமாக 15 மாத்திரைகளை சாப்பிடுகிறார்கள் என்று தெரிவித்தனர். இதனிடையே மருத்துவர் கூறுகையில், ஒரு நபர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாத்திரைகள் உட்கொண்டால் அது நோய் எதிர்வினைகளை ஏற்படுத்துவதாகவும் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

நடிகர் கவுண்டமணியின் மனைவி உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி.!

நடிகர் கவுண்டமணியின் மனைவி உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி.!

சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…

35 minutes ago

SRH vs DC : வெற்றி யாருக்கு? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…

1 hour ago

குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் வெளியானது.!

சென்னை :  குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…

2 hours ago

“முதல்வர் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்” – தமிழிசை சௌந்தரராஜன்.!

சென்னை : தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ள பாகிஸ்தான் பங்களாதேஷை சேர்ந்தவர்களை வெளியேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் பயங்கரவாத தாக்குதலை…

2 hours ago

விஜய்யை நெருங்கிய தொண்டர் தலையில் துப்பாக்கி வைத்த பாதுகாவலர்.!

மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…

3 hours ago

பஹல்காம் தாக்குதல் : 2வது முறையாக பாகிஸ்தான் ஏவுகணை சோதனை.!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…

3 hours ago