ஊரடங்கால் தற்கொலை செய்து கொண்ட பிரபல சீரியல் நடிகர்.!

Published by
Ragi

மன்மித் கரோவால் ஆதத் சே மஜ்பூர் என்ற தொடரின் மூலம் பிரபலமானவர்  அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் நிலையில் நாடு முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கு மே 31 வரை பிறப் பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.அது மட்டுமின்றி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் வேலைநிறுத்தமும் செய்யப்பட்டதன் காரணமாக திரைப்படத்துறை ஊழியர்களின் வாழ்வும் பாதிக்கப் பட்டுள்ளது.இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சீரியல் நடிகரான மன்மித் கிரோவால் வறுமை காரணமாக கடந்த சனிக்கிழமை அன்று தற்கொலை செய்து கொண்டார் .

மன்மித் கரோவால் ஆதத் சே மஜ்பூர் என்ற தொடரின் மூலம் பிரபலமானவர் . மும்பையில் உள்ள கார்கில் நகரில் வசித்து வந்த இவர் கடந்த சில மாதங்களாக வேலைவாய்ப்பிலாமல் இருந்த நிலையில் ஊரடங்கில் மிகுந்த வறுமையில் வாழ்ந்து வந்தார்.இதனால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்ய அதனை கண்ட மனைவி கூச்சலிட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கொரோனா காரணமாக வர மறுத்துள்ளனர்.அதனையடுத்து வாட்ச்மேன் உதவியால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வழியிலே உயிரிழந்துள்ளார். விசாரணையில் 32 வயதான இவர் வாடகை  பணம் கொடுக்க இயலாமையாலும் ,கடன் பிரச்சினை காரணமாகவும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.இந்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Published by
Ragi

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

2 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

3 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

4 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

4 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

6 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

7 hours ago