போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் மதன் கார்க்கி வரிகள் எழுத ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்து பாடிய பாடல் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினமாக ஜூன் 26ஆன இன்று அனுசரிக்கப்படுகிறது. பலர் சமூக வலைத்தளங்களின் மூலம் போதைப்பொருள்களுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் படி கருத்துகளையும், அதனால் பாதிக்கப்பட்டவர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்தும் வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பிரபல தயாரிப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளரான ராஜீவ் மேனன், ஜி. வி. பிரகாஷ் குமார், பாடலாசிரியர் மதன் கார்க்கி ஆகியோர் இணைந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த பாடலை தமிழக அரசு மற்றும் தமிழக காவல்துறையினர் இணைந்து தயாரித்துள்ளனர்.
“Say No To Drugs” என்ற அந்த பாடலை சோனி மியூசிக் சவுத் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளது. ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, அவருடன் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து பாடியுள்ளார். பாடலாசிரியர் மதன் கார்க்கி வரிகள் எழுத கவின் ஆதித்யா எடிட்டிங் செய்துள்ளார்.’Say No To Drugs, Say Yes To Life ‘என்ற வரிகளுடன் கூடிய அந்த விழிப்புணர்வு பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
டெல்லி : இந்தியாவின் விமானப் பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகள் குறித்து சமீபத்திய DGCA தணிக்கைகள் பல முக்கியமான பிரச்சினைகளை வெளிப்படுத்தியுள்ளன.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இந்த கூட்டத்தொடரின் போது இல்லாதது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…
சென்னை : தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நடிகை குஷ்பு உள்பட 14 பேர்…
சென்னை : நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு (EOW)…
அமெரிக்கா : அமெரிக்காவுடன் சுமுகமான வர்த்தக உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 1-ஆம் தேதி) முதல்…
ஆந்திரா : நாசா மற்றும் இஸ்ரோ கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட 'நிசார்' செயற்கைக்கோள் இன்று (ஜூலை 30, 2025) வெற்றிகரமாக…