எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு.! சர்ச், கோவில், மசூதி எல்லாம் ஒன்றுதான்.! விஜயின் அசத்தலான பதில்.!

Published by
பால முருகன்

தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக திகழ்பவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

பொதுவாக விஜய் நடிக்கும் படங்களுக்கு இசை வெளியிட்டு விழா நடைபெறும். அந்த நிகழ்ச்சியின்போது விஜய் ரசிகர்களுக்கு குட்டி கதை மற்றும் தனக்கு தோன்றும் அரசியல் கருத்துக்களை தைரியமாக பேசிவிடுவார். அவர் பேசும் கருத்துக்கள் சில சமயம் தலைப்பு செய்தியாக மாறிவிடும்.

இந்தமுறை இசை வெளியீட்டு விழா வைக்காததால் விஜய்யின் ரசிகர்களை மிகுந்த சோகத்தில் இருந்தார்கள். அவர்களை உற்சாகம் படுத்தும் வகையிலும், பீஸ்ட் பட ப்ரோமோஷனுக்காகவும் விஜய் சன் டிவியில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்றார்.

கிட்டத்தட்ட சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் விஜய் தொலைக்காட்சி நேர்காணலில் பங்கேற்றார். நேற்று இரவு 9 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது. நேர்காணல் நிகழ்ச்சியை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் தொகுத்து வழங்கினார்.

 

நிகழ்ச்சியில், நெக்லசன், விஜயிடம், நீங்கள் வெளிநாட்டு ஷூட்டிங்கின் போது, சர்ச் போவதை வாடிக்கையாக வைத்திருந்தீர்கள். உண்மையில் கடவுள் நம்பிக்கை உள்ளவரா நீங்கள் என்றவாறு கேட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய விஜய், ‘ ஆம் எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு.

வழக்கமாக தேவாலயம் செலவேன். பிள்ளையார்பட்டி கோவிலுக்கும் செல்வேன், மசூதிக்கும் சென்றுள்ளேன். தேவாலயம் போகும் போகும் போது என்ன தோன்றுமோ அதே போல தான் மற்ற கோவில், மசூதிகளுக்கு செல்லும் போதும் தோன்றும். எம்மதமும் சம்மதம். ‘ என்பது போல தனது தெளிவான பதிலை விஜய் அளித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

“என் குழந்தைகளுக்கு ஹனுமான்தான் தெரியும்.. ஸ்பைடர் மேன்-சூப்பர் மேன் தெரியாது” – நமீதா பெருமிதம்!

சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…

1 hour ago

இங்கிலாந்தில் எத்தனை சதம் வச்சிருக்க? சீண்டிய ஜானி பேர்ஸ்டோவ்…பதிலடி கொடுத்த கில்!

லீட்ஸ் : இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஜூன் 21-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், இந்திய…

1 hour ago

“ஆங்கிலம் முன்னேற்றத்திற்கான உலகளாவிய கருவி” – அன்பில் மகேஸ்.!

சென்னை : ஆங்கிலம் பேசுபவர் வெட்கபட வேண்டும் என்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்…

2 hours ago

இஸ்ரேல் உளவு சேவைகளுடன் தொடர்பு.., ஈரானில் 22 பேர் கைது.!

ஈரான் : கடந்த ஜூன் 13 முதல், இஸ்ரேலிய உளவு சேவைகளுடன் தொடர்பில் இருந்த 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

2 hours ago

”அனைவரும் யோகாசனம் செய்வோம்” – அண்ணாமலை அழைப்பு.!

சென்னை : சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர…

2 hours ago

எடப்பாடி பேசுவதை பார்த்து கவலைப்பட வேண்டாம்! பதிலடி கொடுத்த அமைச்சர் சேகர்பாபு!

சென்னை : தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள் தீவிரமாக அரசியலுக்கான வேலையில்…

2 hours ago