இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி தரமுடியாது – அமெரிக்கா!

Published by
Rebekal
  • இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் கோவாக்சின் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்காவில் அனுமதி மறுப்பு.
  • கூடுதல் தரவுகளுடன் உயிரி உரிமை விண்ணப்ப வழியில் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க அறிவுறுத்தல்.

இந்தியாவிலுள்ள ஹைதராபாத்தின் பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட கூடிய கோவாக்சின் தடுப்பூசி இந்தியாவில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த தடுப்பூசி அவசரகால பயன்பாட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தாலும், இந்த தடுப்பூசி மூன்றாவது கட்ட பரிசோதனை இன்னும் வெளி வராமல் உள்ளது. சாதாரணமாகவே ஒரு தடுப்பூசிக்கு உலக அளவில் அங்கீகரம் கிடைக்க வேண்டுமானால், அதற்கு எப்டிஏ,உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் மருந்து கட்டுப்பாடு நிறுவனத்தின் அனுமதி ஆகியவை அவசியம்.

ஆனால் இந்த அமைப்புகளின அங்கீகாரம் கிடைக்காத கோவாக்சின் தடுப்பூசியின் இரண்டாம் தவணை டோஸ் செலுத்தி கொண்டவர்கள் கூட தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களாக தான் பிற நாடுகளால் கருதப்படுகின்றனர். இந்நிலையில் கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் பெறுவதற்காக அமெரிக்காவில் உள்ள தனது பங்கு நிறுவனமான ஒகுஜன் மூலம் பாரத் பயோடெக் நிறுவனம் முயற்சி மேற்கொண்டுள்ளது.

எனவே ஒகுஜன் நிறுவனம் அமெரிக்காவில் அவசரகால பயன்பாட்டில் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்துள்ளது. ஆனால் இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த எப்டிஏ  அமெரிக்காவில் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி தர முடியாது என மறுத்துள்ளது. மேலும் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகள் குறித்த கூடுதல் விவரங்களுடன் உயிரி உரிம விண்ணப்பம் நடைமுறையில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

12 hours ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

13 hours ago

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

13 hours ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

14 hours ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

14 hours ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

15 hours ago