கோயம்பேடு மார்க்கெட்டை தொடர்ந்து, எம்.ஜி.ஆர் நகர் சந்தையில் இருவருக்கு கொரோனா உறுதி..!

சென்னையில் எம்.ஜி.ஆர் நகர் சந்தையில் இருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதால், அங்கு 150 பேருக்கு பரிசோதனை செய்யப்படுள்ளது.
தமிழகத்தில் கோயம்பேடு சந்தை மூலமாக கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், அதனை மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. தற்பொழுது அதனை தொடர்ந்து, எம்.ஜி.ஆர் நகர் சந்தையிலும் வியாபாரிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த சந்தையில்150 வியாபாரிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், தற்காலிகமாக மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்று உறுதியான இருவரும் 57 வயதிற்கு மேற்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஜட்ஜ் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்! உச்சநீதிமன்றம் வெளியிட்ட பரபரப்பு வீடியோ! அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன?
March 23, 2025
KKRvsRCB : கொல்கத்தாவில் வெற்றி கொடி நாட்டிய பெங்களூர்! கிங் கோலி படைத்த மிரட்டல் சாதனை!
March 22, 2025
என்னை விட்டுட்டோம்னு பீல் பண்ணுங்க! கொல்கத்தாவுக்கு அதிரடி மூலம் பதிலடி கொடுத்த சால்ட்!
March 22, 2025