பெரு நாட்டில் சுரங்கத்தொழிலாளர்கள் பேருந்து விபத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று பெரு. இந்நாட்டில் உள்ள அப்ருனிமெக் மாகாணத்தில் காப்பர் சுரங்கம் அமைந்துள்ளது. ஹடபம்பாஸ் நகரில் அமைந்துள்ள இந்த சுரங்கத்திலிருந்து வழக்கம்போல் வேலை முடிந்தவுடன் 18 பணியாளர்களை ஏற்றி கொண்டு அந்த நிறுவனத்தின் பேருந்து சென்றுள்ளது. அப்பொழுது மலைப்பாங்கான பகுதி வழியாக பேருந்து சென்றுள்ளது.
அச்சமயத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து திடீரென 200 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து அறிந்த மீட்பு படையினர், விரைவாக சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். மேலும், காயமடைந்தவர்களை அங்கிருந்து மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…