கொரோனா நோயாளியை கண்டறியும் மோப்ப நாய்….!

Published by
லீனா

கொரோனா தொற்று உள்ளவர்களை தான் மோப்ப சக்தியை கொண்டு கண்டறியும் மோப்ப நாய். 

உலகம் முழுவதும் கொரானா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை அழிக்க அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்த வைரஸ் தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகளும், பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இங்கிலாந்தில் எல்.எஸ். எச்.டி.எம்., பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியில் பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள் மூலம் ஒருவர் கொரோனா நோயாளியா? என்பதை 94% துல்லியத்துடன் கண்டுபிடிக்க முடியும் என்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து நோய் தடுப்பு பிரிவு தலைவர் ஜேம்ஸ் லோகன் கூறுகையில், ஒருவரின் உடலிலிருந்து வெளிப்படும் வாசனை மூலமாக, அவருக்கு கொரோனா உள்ளதா என்பதை மோப்ப நாய்கள் கண்டுபிடித்துவிடும் என்பது, எங்கள் ஆய்வில் நிரூபணமாகியுள்ளது. இதற்காக பயிற்சியாளர்கள் நாய்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளித்து வருகின்றனர்.

நாய்களிடம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவரின் உடை, முக கவசம் சாக்ஸ் போன்றவற்றை கொடுத்து மோப்ப சக்தியை கொண்டு உணர செய்கின்றன. அந்த வகையில், 3,750 பேரின் மாதிரிகள் இந்த சோதனைக்காக சேகரிக்கப்பட்டது. அவற்றில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் 322 பேர், நோயால் பாதிக்கப்படாத 675 பேர் என துல்லியமாக அடையாளம் கண்டுள்ளதாகவும், இது மிகவும் நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இந்த மோப்ப நாய்களின் உதவியுடன், விமான நிலையங்களில் இரண்டு மோப்ப நாய்களை கொண்டு 30 நிமிடங்களிலேயே 300 பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா? இல்லையா? என்பது குறித்து எளிதாக கண்டறிந்து விடலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

8 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

8 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

8 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

10 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

11 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

11 hours ago