திருவள்ளுவர், காந்தி படங்கள் மட்டுமே நீதிமன்றங்களில் இருக்கவேண்டும்; சென்னை உயர்நீதிமன்றம் அறிக்கை.!

நீதிமன்றங்களில் இனி திருவள்ளுவர், மகாத்மா காந்தி உருவப்படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தகவல்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நீதிமன்ற வளாகங்களில் திருவள்ளுவர், மற்றும் காந்தி ஆகியோரின் உருவப்படங்கள் மட்டுமே இனி இடம்பெறவேண்டும், மற்ற தலைவர்களின் படங்கள் நீக்கப்படவேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் அனைத்து நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
ஆலந்தூரில் புதிய நீதிமன்ற கட்டிடத்தில் உள்ள அம்பேத்கர் படம் உட்பட நீக்கவும் அறிவுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.