கேரள மாநிலத்தில் கொரோனா சூழல் குறித்து ஆலோசனை நடத்த இன்று (செவ்வாய்க்கிழமை) அனைத்துக் கட்சிக் கூட்டம் கூடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர் சந்திப்பு மூலம் வெளியிட்டார்.
அப்போது இது குறித்து அவர் தெரிவித்ததாவது:
“கேரளாவில் புதிதாக 4,538 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 3,347 பேர் குணமடைந்து உள்ளனர், 20 பேர் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,79,922 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 697 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 12.59 சதவிகிதமாக உள்ளது.
கொரோனாவுக்கான நடைமுறைகளைப் பின்பற்றாவிட்டால் மிககடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் அனுமதி கிடையாது. இறுதிச் சடங்குகளில் 20 பேருக்கு மேல் அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளார்.மேலும் மாநிலத்தில் நிலவும் கொரோனா சூழல் குறித்து ஆலோசனை நடத்த நாளை அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். இக்கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…