பழிக்கு பழி .! அமெரிக்காவின் முகத்தில் அறைந்துள்ளோம்-அயதுல்லா அலி .!

Published by
murugan
  • ஈரான் நேற்று அதிகாலை ஈராக்கின் அல் அசாத் பகுதியில் உள்ள அமெரிக்க படைகள் உள்ள ராணுவ தளத்தின் மீது  10-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி  தாக்குதல் நடத்தியது.
  • தாக்குதல் நடத்தி அமெரிக்காவின் முகத்தில் அறைந்துள்ளோம் என அயதுல்லா அலி காமெனி கூறினார்.

ஈராக் தலைநகர் பாக்தாக் விமான நிலையத்தின் அருகே கடந்த 3-ம் தேதி அமெரிக்க நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஈரான் நாட்டின் உளவுத்துறை இராணுவ தளபதி காசிம் சுலைமானி மற்றும்  ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின் துணை தலைவர் அபு மகாதி உள்ளிட்ட 7 பேர் இறந்தனர்.

அமெரிக்கவின் இந்த தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையில் போர் ஏற்படும் சூழல் உள்ளது.இராணுவ தளபதி காசிம் சுலைமானி இறப்பு ஈரானில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதை தொடர்ந்து அமெரிக்காவை  கண்டிப்பாக பழி வாங்குவோம் என ஈரான் வெளிப்படையாக கூறியது.அதற்கு டிராம்ப் அப்படித் தாக்கப்பட்டால் பின்னர் எதிர்வினை மிக மோசமானதாக இருக்கும் எனவும் , ஈரானின் முக்கிய 52 இடங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்”என தனது ட்விட்டர் பக்கத்தில் கூறினார்.

இந்நிலையில் காசிம் சுலைமானி இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். மேலும் இறுதி ஊர்வலத்தில் ஈரான் கொடியையும் ,காசிம் சுலைமானி புகைப்படம் மற்றும் அமெரிக்காவிற்கு எதிரான வாசகங்களையும் பொதுமக்கள் வசித்தபடி சென்றனர்.இறுதி ஊர்வலத்தில் பேசிய மூத்த தலைவர் ஒருவர் அமெரிக்க ஜனாதிபதி  டிரம்ப் தலையை கொண்டு வருபவருக்கு 8 கோடி அமெரிக்க டாலர்கள் ( அதாவது இந்திய மதிப்பில் ரூ.576 கோடி) பரிசு வழங்கப்படும் என தெரிவித்தார்.

Image result for சுலைமானி இறுதி

இதை அடுத்து ஈரான் நேற்று அதிகாலை ஈராக்கின் அல் அசாத் பகுதியில் உள்ள அமெரிக்க படைகள் உள்ள ராணுவ தளத்தின் மீது  10-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி  தாக்குதல் நடத்தியது.தாக்குதல்களில் குறைந்தது 80 அமெரிக்க வீரர்கள் இறந்து உள்ளதாக தகவல் வெளியானது . இந்த தாக்குதல் குறித்து அறிக்கை இன்று வெளியிடுவதாக நேற்று கூறினார்.

இந்நிலையில் இந்த தாக்குதலில் ஃபத்தே 110 பாலிஸ்டிக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டு இருந்தாகவும் ,இந்த ஏவுகணைகள் 186 கி.மீ இருந்து  300 கி.மீ. வரை சென்று தாக்கும் சக்தி கொண்டது. இந்த தாக்குதலுக்கு ‘”தியாகி சுலைமானி “என பெயரிடப்பட்டு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தாக்குதல் குறித்து கூறிய ஈரானின் மூத்த மத தலைவர் அயதுல்லா அலி காமெனி ,  தாக்குதல் நடத்தி அமெரிக்காவின் முகத்தில் அறைந்துள்ளோம் என கூறி உள்ளார்.

 

Published by
murugan

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

3 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

3 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

4 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

5 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

6 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

6 hours ago