அதிகரிக்கும் கொரோனா தொற்று : மலேசியாவில் மீண்டும் புதிய கட்டுப்பாடுகள்!

Published by
Rebekal

அதிகரிக்கும் கொரோனா தொற்று காரணமாக மலேசியாவில் மீண்டும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் உலகின் பல நாடுகளில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. சில இடங்களில் மட்டுமே தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மலேசியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. மலேசியாவில் உள்ள மூன்று மாநிலங்களில் தற்பொழுது கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அங்கு புதிய கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூறிய மலேசியாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் இஸ்மாயில் அவர்கள், கொரோனா வைரஸால் இதுவரை 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மலேசியாவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நேற்று 660 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும் தொற்று பரவாமல் இருப்பதற்காக அதிகம் பரவி வரக் கூடிய மாநிலங்களான கோலாலம்பூர், புத்ராஜெயா, சிலாங்கூர் ஆகிய மாநிலங்களுக்கு இரு வாரங்களுக்கு சில கூடுதலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த மூன்று மாநிலங்களிலும் வருகிற இரு வாரங்களுக்கு ஒரு வீட்டிலிருந்து ஒருவர் மட்டுமே அத்தியாவசிய பொருள் வாங்க வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவர் எனவும், உயர் கல்வி, பள்ளிகள், பொழுதுபோக்கு, வழிபாட்டுத்தலங்கள் ஆகிய அனைத்துமே மூடப்பட்ட நிலையில் இருக்கும். விளையாட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கப்படும் எனவும், நேர கட்டுப்பாடுகளுடன் ஓட்டல், கடைகள் மற்றும் பெட்ரோல் பங்க், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவை செயல்படுத்தப்படும் எனவும், விமான நிலையம் துறைமுகம் செயல்படும். ஆனால் திருமண நிகழ்ச்சிகளுக்கு இந்த இரு வாரங்களில் சுத்தமாக அனுமதி கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

IND Vs ENG: ”தொடரில் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்க விரும்புகிறேன்” – சுப்மன் கில்.!

IND Vs ENG: ”தொடரில் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்க விரும்புகிறேன்” – சுப்மன் கில்.!

இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…

4 hours ago

மாறன் குடும்பத்தில் பிளவு? கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ்.!

சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…

4 hours ago

ஆபரேஷன் சிந்து: ஈரானை தொடர்ந்து இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர ஏற்பாடு.!

இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…

5 hours ago

வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்.., ”இது வெறும் கீறல்தான்”- எலான் மஸ்க் பதிவு.!

டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…

6 hours ago

ஜூன் 24, 25ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…

6 hours ago

அணு உலை தகர்ப்புக்கு பதிலடி.., இஸ்ரேலின் முக்கிய இடங்களை தாக்கிய ஈரான்.!

மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…

6 hours ago