நடிகர் சூரிக்கு சிவகார்த்திகேயன் தனது ட்வீட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது கலக்கி வருபவர் சூரி. கடந்த 2009- ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் பரோட்டா போட்டியில் கலந்து கொள்வது போல இருந்த காட்சியில் நடித்துப் பிரபலமானதால் ரசிகர்களுக்கு மத்தியில், பரோட்டா சூரி என்று அழைக்கப்பட்டார்.
இந்த படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, அஜித், விஜய், சூர்யா, தனுஷ், ஆகிய முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இதுவரை காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்த சூரி வெற்றி மாறன் இயக்கும் விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார்.
இந்த நிலையில், இன்று நடிகர் சூரி தனது 44 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகை சார்ந்த பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதில், எதிர் நீச்சல் அடி வென்று ஏற்றுக்கொடி ஆள் செமயா இருக்கீங்க.. இனிமேல் ஹீரோ தான்.. நாங்க சங்கத்துக்கு வேற செயலாளரை தான் பாக்கணும் போல… அன்பு அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயனுடன் இவர் நடித்த அனைத்து திரைப்படங்களிலும் இருவரின் காமெடிக்கு பஞ்சமே இருக்காது. திரையுலகை தாண்டி இருவரும் அண்ணன் தம்பியாக பழகி வருகிறார்கள். தற்போது இருவரும் இணைந்து டான் என்ற படத்தில் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…