தீபாவளிக்கு வெளியான திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிகள் கிடையாது என அறிவிக்கப்பட்டு, பின்னர் படக்குழுவினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது.
சிறப்பு காட்சிகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்க படுவதாக எழுந்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த விவகாரம் தொடர்பாக தற்போது தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு தனது டிவிட்டர் பக்கத்தில் ‘அதிக டிக்கெட் விலை, ஒரு காட்சிக்கு அனுமதி வாங்கிவிட்டு 2,3 காட்சிகளை திரையிடுகிறார்கள்” என்ற தொடர் குற்றச்சாட்டுகளால்தான் தீபாவளிக்கு சிறப்புக்காட்சிக்கு அனுமதி இல்லையென கூறினோம். பின் பொதுமக்கள், ரசிகர்களின் கோரிக்கைக்கிணங்க ஒரு காட்சிக்கு மட்டும் ஒரு நாள் அனுமதி அளித்தோம். ‘ என கூறியிருந்தார்.
மேலும், ‘ இனிமேல் சிறப்புக்காட்சிகளுக்கு அரசே ஒரு கட்டணத்தை நிர்ணயித்து, அது வெளிப்படையாக மக்களுக்கும் தெரிவிக்கப்பட்டு அந்த கட்டணத்தை தான் வாங்க வேண்டுமென கூறியிருக்கின்றோம்.’ எனவும் பதிவிட்டுள்ளார்.
இதனால், இனி சிறப்பு காட்சிகளுக்கும் அரசே கட்டத்தை நிர்ணயம் செய்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…