சிம்புவின் 48-வது படத்தின் புதிய அப்டேட் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிம்பு தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் “மாநாடு” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கல்யாண் பிரியதர்ஷன் நடித்துள்ளார். அரசியலை மையமாக வைத்து இந்த திரைப்பட எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 4-ஆம் தேதி தீபாவளி விருந்தாக வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்குகிறார். படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.
இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு பத்து தல படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், தற்போது நடிகர் சிம்புவின் 48-வது திரைப்படம் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் சிம்புவின் அடுத்த படத்தையும், வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பது உறுதியாகியுள்ளது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…