முதல்வர் உட்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்!

Published by
Edison

தனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 72 வது பிறந்த நாளையொட்டி நேற்று தமிழக முதல்வர்,பிரதமர் மோடி என அரசியல் தலைவர்கள் மற்றும் மக்கள் ரசிகர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில்,தனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் தந்து அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“என்னுடைய பிறந்த நாளன்று என்னை நெஞ்சார வாழ்த்திய மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய என் அருமை நண்பர் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. M.K. Stalin அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும்,என்னை அன்புடன் வாழ்த்திய மத்திய அமைச்சர் திரு. அமித் ஷா அவர்களுக்கும், திரு ராஜ்நாத் சிங், திரு நிதின் கட்கரி, பாராளுமன்ற சபா நாயகர் திரு. ஓம் பிர்லா, பல் மாநில ஆளுநர்களுக்கும், திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், திரு. O. பன்னீர் செல்வம், திரு G.K.வாசன், திரு. திருநாவுக்கரசர், திரு. T.K. ரங்கராஜன். திரு. பொன் ராதாகிருஷ்ணன். திரு. வைகோ, திரு. அண்ணாமலை. திரு அன்புமணி ராமதாஸ், திரு திருமாவளவன், திரு. சீமான், திரு. தினகரன்,

திருமதி. சசிகலா அவர்களுக்கும், மற்றும் பல மத்திய, மாநில அரசியல் நண்பர்களுக்கும், திரு. கமல் ஹாசன், திரு. இளையராஜா திரு. பாரதிராஜா, திரு. வைரமுத்து திரு. அமிதாப் பச்சன், திரு. ஷாருக்கான், திரு. சச்சின் டெண்டுல்கர். திரு. ஹர்பஜன்சிங், திரு. வெங்கடேஷ் ஐயர். மற்றும் பல பிரபலங்களுக்கும், திரை உலகை சார்ந்த அனைத்து நண்பர்களுக்கும், ஊடக, பத்திரிகை நண்பர்களுக்கும், என் நலனுக்காக கோயில்களில் பூஜைகளும், ஹோமங்களும், அன்னதானங்களும் நடத்தி வாழ வைக்கும் தெய்வங்களான என் ரசிக பெருமக்களுக்கும், தமிழக மக்களுக்கும் என் தெரிவித்துக்கொள்கிறேன்”,என்று கூறியுள்ளார்.

Published by
Edison

Recent Posts

“படகுகளில் த.வெ.க. பெயர்.., மீனவர்களை மிரட்டும் தி.மு.க. அரசு” – விஜய் கண்டனம்.!

“படகுகளில் த.வெ.க. பெயர்.., மீனவர்களை மிரட்டும் தி.மு.க. அரசு” – விஜய் கண்டனம்.!

சென்னை : படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் மறுப்பதா? என்று அரசுக்கு விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  ஏற்கெனவே…

2 minutes ago

”மதுரையில் சொத்து வரி விதிப்பதில் மிகப்பெரிய ஊழல் முறைகேடு” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.!

சென்னை : மதுரையில் சொத்து வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

36 minutes ago

திருவாரூர் அரசு நிகழ்ச்சியில் 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர்…

1 hour ago

ஏமனில் தூக்கு தண்டனை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் செவிலியர் நிமிஷா தரப்பில் மனு.!

டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…

1 hour ago

5 நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி.!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…

2 hours ago

கோவை குண்டு வெடிப்பு: 28 ஆண்டுக்கு பின் குற்றவாளி கைது.!

சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…

2 hours ago