அமைச்சர் பொன்முடி வழக்கின் விசாரணை 16ம் ஒத்திவைப்பு!

Minister Ponmudi

செம்மண் குவாரி முறைகேடு தொடர்பான அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு விசாரணை 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த பூத்துறை செம்மண் குவாரியில் அளவுக்கதிகமாக செம்மண் எடுத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கு தொடுக்கப்பட்டது.

2006-2011 காலகட்டத்தில் திமுக ஆட்சியின்போது செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்பட்டதாக வழக்கு பதியப்பட்டது. அதன்படி, அமைச்சர் பொன்முடி, கவுதம சிகாமணி உள்ளிட்ட 8 பேர் மீது 2012ல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதில், லோகநாதன் உடல்நலக் குறைவால் காலமானார். இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அதன்படி, சமீபத்தில் கடந்த 8ம் தேதி வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது,  வழக்கு தொடர்பாக ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், கோபிநாத், சதானந்தன் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி எம்.பி., கோதகுமார் ஆஜராகவில்லை.

இதையடுத்து, வழக்கு விசாரணை இன்றைக்கு ஒத்திவைத்து, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார். இந்த நிலையில், அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. ஆனால், செம்மண் குவாரி முறைகேடு தொடர்பான அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு விசாரணை 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்