2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டவர்கள் முகக் கவசம் அணிய தேவையில்லை – அமெரிக்க அரசு!

Published by
Rebekal

கொரோனாவிற்கான 2 டேஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டவர்கள் முகக் கவசம் அணிய தேவையில்லை என அமெரிக்கா நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது.

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு முகக்கவசம் அணிவதையும் சமூக இடைவெளியை பின்பற்றுவதையும் மக்கள் வழக்கமாக கடைபிடிக்க வேண்டும் என உலகின் பல நாடுகளில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது கொரோனாவின் தீவிரத்தை ஒழிக்க உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து நாடுகளிலும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர். அமெரிக்காவிலும் தடுப்பூசித் செலுத்தும் பணிகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், அந்நாட்டில் கொரோனா பரவல் தற்போது மிகவும் குறைய தொடங்கியுள்ளது.

இதுவரை அமெரிக்காவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் சுமார் 15 கோடிக்கு மேற்பட்டோர் கொரோனாவின் முதல் தடுப்பூசி எடுத்துக்கொண்டு உள்ளதாகவும், 11 கோடிக்கும் மேற்பட்டோர் தடுப்பூசியின் இரண்டாம் டோஸ்களை எடுத்துக்கொண்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை தடுப்பதற்கு கட்டாயமாக அறிவுறுத்தப்பட்டுள்ள முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அமெரிக்காவிலும் மக்கள் அறிவுறுத்தப்பட்டு நிலையில், தற்பொழுது கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்து கொண்டவர்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை என நாட்டின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தற்போது அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் 6 அடி சமூக இடைவெளியை பின்பற்றி நடக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மக்கள் கூட்டம் நிறைந்த பகுதியில் மருத்துவமனை, பொது போக்குவரத்து, விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பொழுது முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசியை இதுவரை செலுத்தி கொள்ளாதவர்கள் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும் எனவும், முதல் டோஸ்  செலுத்தி கொண்டவர்கள் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

வலுவிழந்தது தாழ்வு மண்டலம்.., ”இன்று 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்” – வானிலை அப்டேட்..!

வலுவிழந்தது தாழ்வு மண்டலம்.., ”இன்று 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்” – வானிலை அப்டேட்..!

சென்னை : வங்கதேசம், மேற்கு வங்கத்தில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

4 minutes ago

நான்தான் பாமக தலைவர்.! ‘பாமக தனி நபரின் சொத்தும் கிடையாது’ – அன்புமணி திட்டவட்டம்.!

சென்னை : நேற்றைய தினம் அன்புமணிக்கு பக்குவமோ, தலைமைப் பண்போ இல்லை என்றும், வளர்த்த கடா மார்பில் பாய்ந்துவிட்டது என்றும்…

27 minutes ago

திலகபாமா நீக்ககிய ராமதாஸ்.., ‘பாமக பொருளாளராக தொடர்வார்’ – அன்புமணி அதிரடி அறிவிப்பு.!

சென்னை : ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் அதிகரித்த நிலையில், திலகபாமா அன்புமணிக்கு ஆதரவாக இருந்தார். இந்த நிலையில், பாமக…

47 minutes ago

ஆர்பிஐ நியூ ரூல்ஸ்: நகைக்கடன் விதிகளை தளர்த்த மத்திய அரசு பரிந்துரை.!

டெல்லி : இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த மாதம் தங்கக் கடன் வாங்குவது தொடர்பாக புதிய விதிகளை வெளியிட்டது.…

1 hour ago

”கொள்ளையடித்த பணத்தை வண்டி வண்டியா கொட்ட போறாங்க” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : சென்னை மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கல்வி விருது விழா இன்று (மே 30) நடைபெற்று…

4 hours ago

தாய்லாந்தில் இந்தியரை தாக்கிய புலி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ.!

பாங்காக் : தாய்லாந்தின் ஃபூகெட்டில் உள்ள பிரபலமான சுற்றுலா பூங்காவில் ஒரு இந்திய மனிதனை புலி தாக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ…

4 hours ago