இன்றைய (21.06.2021) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம்: இன்று உங்கள் பொறுமை சோதனைக்குள்ளாகும் நாள். முறையான தகவல் பரிமாற்றம் இல்லாத காரணத்தால் உங்கள் பிரியமான ஒருவருடன் மோதல் ஏற்படலாம்.
ரிஷபம்: நீங்கள் விருந்துகளில் கலந்து கொள்ள நேரலாம். மற்றும் உங்களுக்கு பிரியமானவர்களை உங்கள் வீட்டிற்கு அழைக்க நேரலாம். உங்கள் முயற்சியின் மூலம் உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும்.
மிதுனம்: உங்கள் வாழ்வில் சிறந்த வளர்ச்சி காணப்படும். உங்கள் செயல்களை இன்று விரைந்து ஆற்றுவீர்கள். வெளிநாட்டிற்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் வளர்ச்சி குறித்து மகிழ்ச்சி அடைவீர்கள்.
கடகம் : உங்கள் அணுகுமுறையில் வன்மையை தவிர்க்க வேண்டும். அமைதியாக இருக்க வேண்டும். நிறைவேறாத உங்களின் லட்சியங்களுக்காக வருந்த வேண்டாம். இன்று பணிகள் அதிகமாக காணப்படும்.
சிம்மம்: உங்கள் வளர்ச்சியில் சில தடைகள் காணப்படும். இன்று வெற்றி காண்பதற்கு முறையாக திட்டமிட வேண்டியது அவசியம்.உங்கள் பணியில் தவறுகள் நேரலாம். பணிகளை முடித்து ஒப்படைப்பதற்கு முன் கவனமாக சரி பார்க்க வேண்டும்.
கன்னி: இன்று நீங்கள் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். எந்தச் செயலிலும் உணர்ச்சிவசப்படாதீர்கள். இசை கேட்பதன் மூலம் மன ஆறுதல் பெறலாம்.இன்று பணிகள் அதிகமாக காணப்படும்.
துலாம்: தொடர் முயற்சி மூலம் இன்று நீங்கள் வெற்றி காணலாம். உங்கள் நலம் விரும்பிகள் மற்றும் நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இன்று நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள்.உங்கள் சகபணியாளர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
விருச்சிகம்: இன்று நீங்கள் உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தினால் உங்கள் லட்சியங்களை அடையலாம். சிறந்த பலனைக் காண இன்று கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தனுசு: இன்று சகஜமான அணுகுமுறை மேற்கொள்ளுங்கள். பிறருடன் நட்பான அணுகுமுறை மேற்கொள்ளுங்கள். அதிக பதட்டம் காரணமாக பணியின் போது தவறுகள் செய்தது போல உணர்வீர்கள்.
மகரம்: உங்கள் மனதிலிருந்து எதிர்மறை எண்ணங்களை நீக்காவிடில் உங்கள் வளர்ச்சி பாதிக்கும். மதிப்பு மிக்க பொருளை இழக்க வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் சக பணியாளர்களுடன் கருத்து வேறுபாடு காணப்படும்.
கும்பம்: பிரச்சினை அல்லது மனக் குழப்பம் காரணமாக இன்றைய நாளை அனுபவிக்கும் மனநிலை உங்களிடம் இருக்காது. நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் பணிகளை திறம்பட மேற்கொள்வீர்கள்.
மீனம்: இன்று நீங்கள் மகிழ்ச்சியாக உற்சாகமாக இருப்பீர்கள். உங்களிடம் ஆற்றல் நிறைந்து காணப்படும்.உங்கள் பணிக்கு பாராட்டு கிடைக்கும். இது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.