கவித்தென்றல் அரங்க சீனிவாசன் அவர்களின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
1920 ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி பர்மாவின் பெகு மாவட்டம், சுவண்டி என்ற சிற்றூரில் பிறந்தவர் தான் கவி தென்றல் அரங்க சீனிவாசன். இவரது தாயார் மங்கம்மாள் நேதாஜி அவர்களின் இந்திய தேசிய இராணுவத்தின் ஜான்சி ராணி படைப்பிரிவின் வீராங்கனை என கூறப்படுகிறது.
மனித தெய்வம் காந்தி காதை என்ற நூல் எழுதுவதற்காக இந்தியா முழுவதும் பயணித்து, தகவல்களைச் சேகரித்த சீனிவாசன், ஐந்து காண்டங்கள், 77 படலங்கள், 5,183 பாடல்களை கொண்ட காவியமாக இந்த நூலை எழுதியுள்ளார். மேலும் இவர் சென்னை தமிழ் வளர்ச்சி மன்றத்தின் அவை கவிஞராகவும் இருந்துள்ளார்.
மேலும் தமிழ் கலைக்களஞ்சியம் உருவாக உறுதுணையாக இருந்த இவர், வைணவத் தத்துவ அடிப்படைகள், தியாக தீபம், வழிகாட்டும் வான்சுடர், சுதந்திரப் போரின் எழுச்சிக் களம், அகமும் புறமும், தாகூர் அஞ்சலி, சுயசரிதை நூல், தேசிய கீதம், நீலிப்பேயின் நீதிக்கதைகள், திருவரங்கத் திருநூல் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
இவர் ஆசுகவி, சித்ரகவி, மதுரகவி, வித்தாரக்கவி எனவும் போற்றப்படுகிறார். இவர் தனது 76 ஆவது வயதில் 1996 ஆம் ஆண்டு மறைந்தார். இவரது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…